மேடையிலொருவன் பொய்குரைப்பான்
தாவி மேடையேறித்
தலையிற்குட்ட முடியவில்லை
சூரிய நிலாக்களாய்க்
கண்ணுக்கழகிய பெண்கள்
கடந்தேகும் போதெல்லாம்
அழகி நீங்களென
வாயாரச் சொல்ல வலிமையில்லை
தண்ணீரே எண்ணெயாய்த்
தாமரைகள் விளக்கெரிக்கும்
குளம்கண்டால்
ஓருடையும் களையாமல் ஓடிக்குதித்து
நீர் குடைந்தாட நேரமில்லை
நீண்டுகிடக்கும் நெடுஞ்சாலையில்
வேப்பமரம் விரித்த நிழற்பாயில்
துண்டு தலைக்கு வைத்துத்
துயில் கொள்ள இயலவில்லை
நீர்வழிப்படூஉம் புணைபோல் நானும்
நதிவழிப்பாட்டுக் கடலடையக்கூடவில்லை
ரயிலில் வரும் சில வியாபாரிகள்
எட்டுக்கட்டையில் இலக்கியம் பேசுகையில்
அபாயச்சங்கிலி பிடித்திழுக்கும்
ஆண்மையின்னும் கூடவில்லை
கடன்கேட்கப் போனவீட்டில்
உப்புக்கரிக்கும் உணவைத்
துப்பித் தொலைக்கத் துணிவில்லை
சிலரது மரணத்தை
தேசிய லாபமென்று
அறிக்கையிடத் திராணியில்லை
முதலமைச்சர் வேலைகோரி
முதலமைச்சருக்கே சொல்லச்சொல்லும்
மூடப்பரிந்துரை மூட்டைகளை
முகத்தில் விசிறியடிக்க முடியவில்லை
தேசியகீதம் இசைக்கும் நேரம்
பிளிறும்-கனைக்கும்-பேசும்-நகரும் பிராணிகளை
வண்டலூர் அனுப்ப வசதியில்லை
இனிப்பு-ஊறுகாய்-நெய்யெல்லாம்
மூக்கோடு முடிகின்றன
நாற்பது வயதானால் நாவுக்கு உரிமையில்லை
பிளிறும்-கனைக்கும்-பேசும்-நகரும் பிராணிகளை
வண்டலூர் அனுப்ப வசதியில்லை
இனிப்பு-ஊறுகாய்-நெய்யெல்லாம்
மூக்கோடு முடிகின்றன
நாற்பது வயதானால் நாவுக்கு உரிமையில்லை
வைத்தியர் சட்டம் வழங்கவில்லை
எழுத மை வேண்டும்
வானத்தின் நீலத்தில்
சில குடங்கள் கேட்டேன்
மசியவில்லை
வான்குடைய வேண்டும்
சிட்டுக் குருவிகளின் சிறகுகளைக்
கடன் கேட்டேன்
தரமாட்டான் மனிதனென்று தரவில்லை
கற்றை மேகமாய்க் காடுகடக்க
ஒற்றைத் தேன்துளியாய்ப் பூவுள்உருள
நீண்ட கனவு... நிறைவேறவில்லை
குறைந்தபட்சம்
ஞாயிறு மட்டுமேனும்
எட்டுமணித் தூக்கம் இயலவில்லை
பழைய பெரியவரே
பாலகங்கா�ர திலக்!
சுதந்திரம் எனது பிறப்புரிமையென்பது
சும்மா.
* * * * *
poem is good,viramuthu sir i love you
ReplyDeletevairamuthu sir yenakku neengal tamil ilakkiyamum ilakanamum katru tharuveergala
ReplyDeletehttp://thamizhaithedi.blogspot.com
its great sir.super!!!!!!!
ReplyDeletekavidhai arumai ena
ReplyDeletepaaraattuum vayadhai adayavillai naan....
kavidhai padithu
paravasam adaindha
manasukku
theeni kidaitha sandhosham...!
indha kavidai
padikkum bodhellaam
kidaikkum enbadhu mei!
சுதந்திரம் நமது பிறப்புரிமை என்பது சும்மாதான்!
ReplyDeleteசிம்மாசனத்தில் இருந்து கூவும் சிங்காரக்குயில்களுக்கு!
பிறப்புரிமை என்பது சும்மா தான் !மக்களை அதிகாரத்தால் அழுத்தும் கோலோச்சும் மன்னர்களின்
பின்னால் இருந்துகொண்டு பாடும் அலங்கார இலக்கிய கர்த்தா மேளங்களுக்கு!
ஆனால்!
பிறப்புரிமை என்பது சும்மா இல்லை!
ஒரு செகுவேரா! ஒரு மாசேதுங் ,ஒரு பகத்சிங்!
போன்ற மாமனிதர்களுக்கு !
தத்துவம் மட்டும் என்றும் சோறுபோடாது உண்மையான மக்கள் நலன்வேண்டும் உண்மைத் தத்துவத்தை நடைமுறைப்படுத்தும் இலக்கில்லாத, நல்ல கட்சி அமைப்பு,கொள்கை இல்லாத ,திட்டமில்லாத தலைமைக்கு தலையாக,வாலாக நாம் உள்ளவரை ,உண்மையான உழைக்கும் மக்கள் வாழும் தத்துவத்தை
செயாலாக்காதவரை
சுதந்திரம் நமது பிறப்புரிமை என்பது சும்மாதான்!
ஆனால்!
சுதந்திரம் நமது பிறப்புரிமை என்பது சும்மா இல்லை
அடிமைப்பட்ட மக்களுக்கு அவர்களோடு அவர்களாக இருந்து போராடும் உழைக்கும் போராளிகளாம் செங்குயில்களுக்கு
kavithai supar arumai
ReplyDelete//”நீர் வழிப்படும் புணை போல் நானும்
ReplyDeleteநதி வழிப்பட்டுக் கடலடையக்கூடவில்ல்லை”//
எது சரி ?
”வழிப்பாட்டு” ? ”வழிப்பட்டு”
எனக்கென்னவோ தட்டச்சுப் பிழை இருப்பது போல் தோன்றுகிறது. தயவு செய்து சரி பார்க்கவும். நன்றி.
வழிப்பட்டு என்பது சரியே ! :)
ReplyDeleteVairamuththu has been probably the only lyricist who has been consistently writing about the various issues affecting the tamil people and tamil culture - peace, globalization, global warming. Even recently, he has published a book called Moonram Ulaga Por. His progressive politics has been discussed in a recent article on tamils.com (http://tamils.com/t-blogs/entry/vairamuthu-s-dream-for-a-just-world.html). Why is that none of his such globally relevant books are not being translated into English and marketed properly?
ReplyDeleteKaniporiyil ungal kavithaiyai padithaen,kaagitham endru marathiyil muthamitaen, uthadugal suttuvitathu...
ReplyDeletemanathil mendum mendum vanthu nilaladum kavithai
ReplyDeleteநான் நேசிக்கும்
ReplyDeleteஇக்கவிஞ்சனை
கட்டி அணைக்கவும் இயலவில்லை
உண்மையில்
சுதந்திரம் சும்மாதான் ஐயா...
Arputha Unarvu!!!!! Ungal kavithai
ReplyDeletekavingyane..!!
ReplyDeleteun kavidhai paditha, enaku
muzhu sudhandhiram kidaithadhu.
negilchiyil, vaai vittu AZHUVADHARKU..
vaazhga un vaarthaigal.!!
சிறப்பு.
ReplyDeleteawesome
ReplyDeleteGood one - kalpana akka
ReplyDeleteஉங்கள் வலைப்பூவை இலவசமாக தமிழ் ப்ளாக் இல் சேர்த்திட வருகை தாருங்கள் http://tamil-bloglist.blogspot.in/
ReplyDeleteஉங்கள் வலைப்பூவை இலவசமாக தமிழ் ப்ளாக் இல் சேர்த்திட வருகை தாருங்கள் http://tamil-bloglist.blogspot.in/
ReplyDeleteஉங்கள் வலைப்பூவை இலவசமாக தமிழ் ப்ளாக் இல் சேர்த்திட வருகை தாருங்கள் http://tamil-bloglist.blogspot.in/
ReplyDeleteநமக்கான அரசியல் மாற்றம் நிகழும்போதுதான் உண்மையான விடுதலை என்பதை ஒப்புக்கொள்ள முடியும்.
ReplyDeleteநமக்கான அரசியல் மாற்றம் நிகழும்போதுதான் உண்மையான விடுதலை என்பதை ஒப்புக்கொள்ள முடியும்.
ReplyDeleteசிறப்பு
ReplyDeleteGood i like this Please visit : www.alfadigitel.com
ReplyDelete