tag:blogger.com,1999:blog-53928588877969878092024-03-12T16:25:58.481-07:00Vairamuththu KavithaigalAuthorhttp://www.blogger.com/profile/17097249222418563662noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-5392858887796987809.post-86493398874295772682010-05-08T18:54:00.000-07:002015-03-05T03:16:30.857-08:00சுதந்திரம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div style="font-family: Verdana,sans-serif;">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgXF2oNs65k_vRNBkWfU0Skv4UG3mlWZZu_MXh_KV_GjRKwyVXq5YDTSVNkB5lJdHMHq81LyzjvmNPEVX0P3vR9HZdsacb_oKULQhbigg0FzJwtI8t3TJufVE8h-VvPRUMTjnJZS3-nS5o/s1600/peace_of_mind_by_mordredx3-d57bpre.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgXF2oNs65k_vRNBkWfU0Skv4UG3mlWZZu_MXh_KV_GjRKwyVXq5YDTSVNkB5lJdHMHq81LyzjvmNPEVX0P3vR9HZdsacb_oKULQhbigg0FzJwtI8t3TJufVE8h-VvPRUMTjnJZS3-nS5o/s1600/peace_of_mind_by_mordredx3-d57bpre.jpg" height="353" width="640" /></a></div>
<span style="font-size: 9pt;"><br /></span>
<span style="font-size: 9pt;"><br /></span>
<span style="font-size: 9pt;"><br /></span>
<span style="font-size: 9pt;"><br /></span>
<span style="font-size: 9pt;"><br /></span>
<span style="font-size: 9pt;"><br /></span>
<span style="font-size: 9pt;"><br /></span>
<span style="font-size: 9pt;"><br /></span>
<span style="font-size: 9pt;"><br /></span>
<span style="font-size: 9pt;"><br /></span>
<span style="font-size: 9pt;"><br /></span>
<span style="font-size: 9pt;"><br /></span>
<span style="font-size: 9pt;"><br /></span>
<span style="font-size: 9pt;"><br /></span>
<span style="font-size: 9pt;"><br /></span>
<span style="font-size: 9pt;"><br /></span>
<span style="font-size: 9pt;">மேடையிலொருவன் பொய்குரைப்பான்<br />
தாவி மேடையேறித்<br />
தலையிற்குட்ட முடியவில்லை<br />
<br />
சூரிய நிலாக்களாய்க்<br />
கண்ணுக்கழகிய பெண்கள்<br />
கடந்தேகும் போதெல்லாம்<br />
அழகி நீங்களென<br />
வாயாரச் சொல்ல வலிமையில்லை<br />
<br />
தண்ணீரே எண்ணெயாய்த்<br />
தாமரைகள் விளக்கெரிக்கும்<br />
குளம்கண்டால் <br />
ஓருடையும் களையாமல் ஓடிக்குதித்து<br />
நீர் குடைந்தாட நேரமில்லை<br />
<br />
நீண்டுகிடக்கும் நெடுஞ்சாலையில் <br />
வேப்பமரம் விரித்த நிழற்பாயில்<br />
துண்டு தலைக்கு வைத்துத்<br />
துயில் கொள்ள இயலவில்லை<br />
நீர்வழிப்படூஉம் புணைபோல் நானும்<br />
நதிவழிப்பாட்டுக் கடலடையக்கூடவில்லை<br />
<br />
ரயிலில் வரும் சில வியாபாரிகள்<br />
எட்டுக்கட்டையில் இலக்கியம் பேசுகையில்<br />
அபாயச்சங்கிலி பிடித்திழுக்கும்<br />
ஆண்மையின்னும் கூடவில்லை<br />
<br />
கடன்கேட்கப் போனவீட்டில்<br />
உப்புக்கரிக்கும் உணவைத்<br />
துப்பித் தொலைக்கத் துணிவில்லை<br />
<br />
சிலரது மரணத்தை<br />
தேசிய லாபமென்று <br />
அறிக்கையிடத் திராணியில்லை<br />
<br />
முதலமைச்சர் வேலைகோரி<br />
முதலமைச்சருக்கே சொல்லச்சொல்லும்<br />
மூடப்பரிந்துரை மூட்டைகளை<br />
முகத்தில் விசிறியடிக்க முடியவில்லை</span><br />
<br /></div>
<div align="justify" style="font-family: Verdana,sans-serif; margin-bottom: 0pt; margin-top: 0pt;">
<span style="font-size: 9pt;"> தேசியகீதம் இசைக்கும் நேரம்<br />
பிளிறும்-கனைக்கும்-பேசும்-நகரும் பிராணிகளை<br />
வண்டலூர் அனுப்ப வசதியில்லை<br />
<br />
இனிப்பு-ஊறுகாய்-நெய்யெல்லாம்<br />
மூக்கோடு முடிகின்றன<br />
நாற்பது வயதானால் நாவுக்கு உரிமையில்லை</span></div>
<div align="justify" style="font-family: Verdana,sans-serif; margin-bottom: 0pt; margin-top: 0pt;">
<br /></div>
<span style="font-family: Verdana,sans-serif; font-size: 9pt;"> எண்ணெய்க்குளியலின் பிற்பகல் தூக்கத்தை<br />
வைத்தியர் சட்டம் வழங்கவில்லை<br />
<br />
எழுத மை வேண்டும்<br />
வானத்தின் நீலத்தில் <br />
சில குடங்கள் கேட்டேன்<br />
மசியவில்லை<br />
<br />
வான்குடைய வேண்டும்<br />
சிட்டுக் குருவிகளின் சிறகுகளைக் <br />
கடன் கேட்டேன்<br />
<br />
தரமாட்டான் மனிதனென்று தரவில்லை<br />
<br />
கற்றை மேகமாய்க் காடுகடக்க<br />
ஒற்றைத் தேன்துளியாய்ப் பூவுள்உருள<br />
நீண்ட கனவு... நிறைவேறவில்லை<br />
<br />
குறைந்தபட்சம்<br />
ஞாயிறு மட்டுமேனும்<br />
எட்டுமணித் தூக்கம் இயலவில்லை<br />
<br />
பழைய பெரியவரே<br />
பாலகங்கா�ர திலக்!<br />
சுதந்திரம் எனது பிறப்புரிமையென்பது<br />
சும்மா.<br />
<br />
</span> <b style="font-family: Verdana,sans-serif;"> <span style="color: red;">*</span> <span style="color: green;">* </span><span style="color: #ff9900;">*</span> <span style="color: green;">*</span> <span style="color: red;">*</span></b></div>
Blankhttp://www.blogger.com/profile/05932071295459267171noreply@blogger.com24tag:blogger.com,1999:blog-5392858887796987809.post-76877111058467600472010-04-25T18:56:00.000-07:002010-04-26T02:28:19.991-07:00தோழிமார் கதை<div style="text-align: center;"><br /><object style="height: 344px; width: 425px;"><param name="movie" value="http://www.youtube.com/v/5B2YiTmgC8U"><param name="allowFullScreen" value="true"><param name="allowScriptAccess" value="always"><embed src="http://www.youtube.com/v/5B2YiTmgC8U" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" allowscriptaccess="always" width="425" height="344"></embed></object></div><br /><pre>ஆத்தோரம் பூத்த மரம் ஆனைகட்டும் புங்கமரம்<br />புங்கமரத்தடியில் பூவிழுந்த மணல்வெளியில்<br />பேன்பார்த்த சிறுவயசு பெண்ணே நெனவிருக்கா?<br /><br />சிறுக்கிமக பாவாடை சீக்கிரமா அவுறுதுன்னு<br />இறுக்கிமுடிபோட்டு எங்காத்தா கட்டிவிட<br />பட்டுச்சிறுகயிறு பட்டஇடம் புண்ணாக<br />இடுப்புத் தடத்தில் நீ எண்ணைவெச்சே நெனப்பிருக்கா?<br /><br />கருவாட்டுப்பானையில சிலுவாட்டுக்காசெடுத்து<br />கோணார்கடைதேடிக் குச்சிஐசு ஒன்னுவாங்கி<br />நாந்திங்க நீகொடுக்க நீதிங்க நாங்கொடுக்க<br />கலங்கிய ஐஸ்குச்சி கலர்கலராக் கண்ணீர்விட<br />பல்லால்கடிச்சுப் பங்குபோட்ட வேளையில<br />வீதிமண்ணில் ரெண்டுதுண்டு விழுந்திருச்சே நெனப்பிருக்கா?<br /><br />கண்ணாமூச்சி ஆடையில கால்க்கொலுச நீதொலைக்க<br />சூடுவைப்பா கெழவின்னு சொல்லிசொல்லி நீஅழுக<br />எங்காலுக் கொலுசெடுத்து உனக்குப் போட்டனுப்பிவிட்டு<br />என்வீட்டில் நொக்குப்பெத்தேன் ஏண்டீ நெனப்பிருக்கா?<br /><br />வெள்ளாறு சலசலக்க வெயில்போல நிலவடிக்க<br />பல்லாங்குழிஆடையில பருவம்திறந்துவிட<br />என்னமோஏதோன்னு பதறிப்போய் நானழுக<br />விறுவிறுன்னு கொண்டாந்து வீடுசேர்த்தே நெனப்பிருக்கா?<br /><br />ஒன்னாவளந்தோம் ஒருதட்டில் சோறுதின்னோம்<br />பிரியாதிருக்க ஒரு பெரியவழி யோசிச்சோம்<br />ஒருபுருஷன்கட்டி ஒருவீட்டில்குடியிருந்து<br />சக்களத்தியா வாழச் சம்மதிச்சோம் நெனப்பிருக்கா?<br /><br />ஆடு கனவுகண்டா அருவா அறியாது<br />புழுவெல்லாம் கனவுகண்டா கொழுவுக்குப் புரியாது<br />எப்படியோ பிரிவானோம் இடிவிழுந்த ஓடானோம்<br /><br />வறட்டூருதாண்டி வாக்கப்பட்டு நாம்போக<br />தண்ணியில்லாக்காட்டுக்குத் தாலிகட்டி நீபோக<br />எம்புள்ள எம்புருசன் எம்பொழப்பு என்னோட<br />உம்புள்ள உம்புருசன் உம்பொழப்பு உன்னோட<br /><br />நாளும்கடந்திருச்சு நரைகூடவிழுந்திருச்சு<br />வயித்துல வளந்தகொடி வயசுக்கு வந்திருச்சு<br />ஆத்தோரம் பூத்தமரம் ஆனைகட்டும் புங்கமரம்<br />போனவருசத்துப் புயல்காத்தில் சாஞ்சிருச்சு!!<br /><br /><span style="color: rgb(0, 0, 0);font-size:78%;" >Vairamuththu, vairamuttu, vairamuththu, Tamil Books, Tamil Actress, Tamil Songs, MP</span><span style="color: rgb(0, 0, 0);font-size:78%;" >3</span><br /></pre>Blankhttp://www.blogger.com/profile/05932071295459267171noreply@blogger.com11tag:blogger.com,1999:blog-5392858887796987809.post-66619770007134548402010-04-23T19:15:00.000-07:002010-04-23T19:17:42.326-07:00ஒரு கவிஞன்<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.artexpertswebsite.com/pages/artists/artists_l-z/spitzweg/Spitzweg_ThePoorPoet1839.jpg"><img style="float: right; margin: 0pt 0pt 10px 10px; cursor: pointer; width: 162px; height: 117px;" src="http://www.artexpertswebsite.com/pages/artists/artists_l-z/spitzweg/Spitzweg_ThePoorPoet1839.jpg" alt="" border="0" /></a>உயிர் பிழிந்து எழுதுவான்<br />சுடர்விட்ட சொல்லெடுத்து<br />மொழிக்கு ஒளியூட்டுவான்<br /><br />கண்ணில் மழைகட்டும் போதெல்லாம்<br />பூமி உதைப்பான்; புரட்சி எழுதுவான்<br />ஆயினும் - பரிகாசமே பரிசாய்ப் பெறுவான்.<br /><br />காலக்கண்ணாடி என்பான் தன்னை<br />ஒருபயலும் அதில் முகம்பார்த்ததில்லை<br /><br />கடல்கடக்கும் பறவைகாள்!<br />சிறகுவலித்தால் எங்கே<br />சிரமபரிகாரம் என்பான்<br /><br />சுற்றும் பூமி நின்றுவிடில்<br />சூழ்காற்று எங்குறையும் எனவியப்பான்<br /><br />சமூகம் அவனைவிட்டுப்<br />பத்தடி தள்ளியே பயணித்தது<br /><br />உறைந்துகிடக்கும் நிலாவெளிச்சமென்று<br />பனித்துளிகள் பார்த்து இமைதொலைப்பான்<br /><br />அவனுக்கு<br />நாட்டுவைத்தியமே<br />நல்லதென்றாள் பாட்டி<br /><br />கோடுகளற்ற நாடுகள்<br />வேலிகளற்ற வீடுகள்<br /><br />வறுமைகளைந்த வாழ்வு<br />கண்ணீர் கழிந்த சமூகம்<br /><br />ஊர்மேடையேறி உரக்கப்படுவான்<br />குல்லாய் தொலைத்த கோமாளியென்றது கூட்டம்<br /><br />பெயர்கள் கூட<br />ஜாதிமத அடையாளம் காட்டுமாதலால்<br /><br />எல்லார்க்கும் பெயர்களைந்து<br />எண்களிடச் சொல்வான்<br /><br />அவனை மனிதப்பிரஷ்டம் செய்யச் சொன்னது மதம்<br /><br />சில்லறைகள் ஓசையிடும்<br />சமூகச் சந்தையில்<br /><br />அடங்கிபோனது அனாதைப்புல்லாங்குழல்<br /><br />பொறுத்தகவி ஒருநாள்<br />பொறுமை துறந்தான்<br /><br />தன் கவிதைகளை<br />நெற்றியில் எழுதி<br /><br />ஒட்டிக்கொண்டான்<br /><br />கூட்டத்தை ஊடறுத்துக்<br />கவிபாடிக் கலைத்தான்<br />ஊசியின் காதோடும்<br /><br />ஒப்பித்தான் கவிதைகளை<br />தெருக்கள் வெறிச்சோடின<br /><br />ஒரு கையில் தீப்பந்தமேந்தி<br />மறுகையில் கவிதையேந்தி<br />நிர்வாணமாக ஊர்வலம் போனான்<br />கண்கள் - கதவுகள் அடைத்துக்கொண்டன<br /><br />தாஜ்மகால் சுவரில்<br />தார் எழுதினான்<br />காலையில் கைதாகி<br />மாலையில் விடுதலையானான்<br /><br />ஒருநாள்...<br />பறவைகள் எச்சமிடும்<br />கோயில் கோபுரமேறி...<br />கலசம் உருகக் கவிதை கூவினான்<br /><br />நிர்வாகம் அவனை<br />இறங்கும்வரை கெஞ்சியது<br />இறங்கியதும் கிழித்தது<br /><br />நேற்று...<br />தன் முதற்கவிதை வெளிவந்த பத்திரிகையின்<br />முதற்பிரதி கொள்ள<br />உயிர்பிதுங்கும் பரபரப்பில்<br />ஓடிக் கடந்ததில் -<br />சாலை விபத்தில் செத்துப்போனான்<br /><br />மொத்த ஊரும் திரும்பிப் பார்த்து<br />மரித்துப் போயினன்<br />'மகாகவி'யென்றதுBlankhttp://www.blogger.com/profile/05932071295459267171noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5392858887796987809.post-6285158916637436022010-04-21T07:07:00.000-07:002010-04-21T07:15:40.268-07:00எனக்கு மட்டும் தெரிந்த வலி<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://t0.gstatic.com/images?q=tbn:HkbAXyJIFXXoJM:http://fineartamerica.com/images-medium/jean-genet-fabrice-plas.jpg"><img style="float: right; margin: 0pt 0pt 10px 10px; cursor: pointer; width: 92px; height: 140px;" src="http://t0.gstatic.com/images?q=tbn:HkbAXyJIFXXoJM:http://fineartamerica.com/images-medium/jean-genet-fabrice-plas.jpg" alt="" border="0" /></a>பொன்னந்தி மாலையிலும்<br />பூமலரும் வேளையிலும்<br />விண்மீனைக் காவல் வைத்து<br />வெண்ணிலவு தூங்கையிலும்<br /><br />கவிதை என்னும் பேய் பிடித்து<br />ஆட்டுதடி என்னை-என்<br />கண்ணிரண்டும் திறந்திருந்தும்<br />காண்பதில்லை உன்னை<br /><br />0<br /><br />தொலைபேசி அடித்தாலும்<br />சொந்தங்கள் சிரித்தாலும்<br />சுளையான பணமெல்லாம்<br />தொகைதொகையாய் வந்தாலும்<br /><br />மூளைக்குள் அவைசென்று<br />முட்டுவதே இல்லை - தாய்<br />மொழியோடு கரைதல் போல்<br />முக்தி பிறிதில்லை<br /><br />0<br /><br />மற்றவரின் காயத்தில்<br />மருந்தாகும் வேளையிலும்<br />மற்றவரின் வேர்களுக்கு<br />மழையாகும் வேளையிலும்<br /><br />இதற்குத்தான் தமிழென்று<br />எனக்குள்ளே சொல்வேன் - நான்<br />எவருக்கும் தெரியாமல்<br />கைதட்டிக் கொள்வேன்<br /><br />0<br /><br />கருவோடு திருவில்லை<br />கடவுள் செய்த அருளில்லை<br />குருவோடு வந்த தமிழ்<br />குடும்பத்துப் பொருளில்லை<br /><br />காளிவந்து என் நாவில்<br />எழுதவில்லை சூலம் - சிறு<br />கடுகளவு உள்ளதெலாம்<br />காலம் தந்த ஞானம்!<br /><br />0<br /><br />முத்தத்தில் ஒதுங்கி<br />முடிவளர்த்த முனிவர்களும்<br />சத்தத்தில் பிதுங்கித்<br />தனிமைகண்ட கவிஞர்களும்<br /><br />காடுசென்று வாழ்ந்ததற்குக்<br />காரணங்கள் உண்டு - என்<br />கவிவாழ நானுமொரு<br />காடுபுகல் என்று?<br /><br />0<br /><br />காற்றாட வனமில்லை<br />கால்நனைக்க நதியில்லை<br />நாற்றாடும் வயலில்லை<br />நனெழுத இடமில்லை<br /><br />சகாராவில் விட்டாலும்<br />தமிழ்கொண்டு சேர்ப்பேன் - சுடு<br />தார்ச்சாலை மீதும் ஒரு<br />தாமரையாய்ப் பூப்பேன்<br /><br />0<br /><br />சத்தம் உறங்கிவிட்ட<br />ஜாமத்தின் மேடையிலே<br />புத்தம் புதுத்தலைப்பு<br />புத்தியிலே உதிக்கையிலே<br /><br />வெண்ணிலவைப் பந்தாட<br />விரையுதடி எண்ணம் - இந்த<br />வெளிஎதிலே முடியுமென்று<br />விளங்கவில்லை இன்னும்<br /><br />0<br /><br />கண்ணீரும் வியர்வைகளும்<br />கல்விகளும் கலவிகளும்<br />மண்ணுலகை வலம் கொண்டு<br />வாங்கிவந்த பட்டறிவும்<br /><br />எல்லாமே கவிதைக்கு<br />எரிபொருளாய் ஆச்சு - எனை<br />இயக்குவது காற்றல்ல<br />இலக்கியத்தின் மூச்சு<br /><br />0<br /><br />புவிகொண்ட ஆறுகளின்<br />புனல்வந்து கலந்ததனால்<br />கவிகொண்ட பிள்ளைமனம்<br />கடலாகிப் போனதடி<br /><br />கவிதையென்னும் சமுத்திரத்தில்<br />ஆவியான மேகம் - உன்<br />காதோரம் ஒலிக்கின்ற<br />கானங்கள் ஆகும்<br /><br />0<br /><br />சித்தத்துக் குள்ளே<br />சேர்த்து வைத்த படைப்புத்தீ<br />ரத்தத்துக் குள்ளே<br />ரகசியமாய் எரியுதடி<br /><br />கட்டையிலே போகையிலும்<br />கட்டாயம் சோதி - என்<br />கண்ணுக்குள் கனலுமடி<br />கவிதையெனும் ஜோதிBlankhttp://www.blogger.com/profile/05932071295459267171noreply@blogger.com12tag:blogger.com,1999:blog-5392858887796987809.post-51285684312048055412010-04-21T06:56:00.000-07:002010-04-21T07:05:24.589-07:00ஒரு மாறுதலுக்காக<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.miracleeworks.com/images/miracle.gif"><img style="float: right; margin: 0pt 0pt 10px 10px; cursor: pointer; width: 173px; height: 342px;" src="http://www.miracleeworks.com/images/miracle.gif" alt="" border="0" /></a>ஒரேமாதிரி சுற்றும் பூமி<br />ஒரேமாதிரி வீசும் காற்று<br />ஒரேமாதிரி உதிக்கும் சூரியன்<br />ஒரேமாதிரி நகரும் வாழ்க்கை<br /><br />மழையும் வழக்கம்போல்<br />மேலிருந்து கீழாய்<br /><br />தேதிபார்த்து வந்து<br />தேதிபார்த்துப் போகும்<br />வசந்தம்<br /><br />ஒரேமாதிரி உணவு<br />ஒரேமாதிரி Àக்கம்<br />ஒரேமாதிரி கனவு<br /><br />எப்படித்தான் நூறாண்டு<br />இருப்பதோ இம்மாநிலத்தே?<br /><br />வாழ்முறை சற்றே<br />மாற்றுக மனிதரீர்<br /><br />வாரத்தில் ஒர்நாள்<br />பகலெல்லாம் தூங்கி<br />இரவெல்லாம் விழிமின்<br /><br />பகல்<br />பிறர்க்காக நீவிர்வாழ<br /><br />இரவு<br />உமக்காக நீவிர்வாழ<br /><br />வானஇலை விரித்து<br />நட்சத்திரம் தெளித்து<br />நிலாச்சோறு பரிமாறுமியற்கை<br /><br />அருந்தாமல் தூங்கும்<br />பசியோடு மனிதகுலம்<br /><br />இரவெல்லாம் விழிமின்<br />நட்சத்திரம் முணுமுணுக்கும்<br />ஓசைகள் காதுற்றால்<br />நல்ல செவியுமக்கு<br /><br />ஒரு கண்ணாடித்துண்டு கொண்டு<br />நிலவைச் சிறையெடுமின்<br /><br />கண்-காது-இருதயம்<br />துருப்பிடிக்குமுன் துலக்குவீர்<br /><br />வானத்தின் நீளஅகலம் தெரியுமா?<br /><br />ஒரு பட்டாம்பூச்சியின் சிறகைப்<br />பேட்டி காண்பீர்<br /><br />வயதாக ஆக<br />வாழ்வோடு ஏன் விவாகரத்து?<br />நெருங்கி வாருங்கள்<br /><br />குழந்தையோடு கூடி விளையாடித்<br />திட்டமிட்டுத் தோற்றுப் போங்கள்<br /><br />கண்ணிரண்டும் மூடித்<br />தொலைபேசி சுழற்றுங்கள்<br /><br />எதிர்முனையில் எவர் வரினும்<br />அன்றைய விருந்துக்கழையுங்கள்<br /><br />வீட்டுப்பிள்ளையர்க்கு விடுமுறைவிட்டு<br />நீங்கள் ஒருநாள் பள்ளிசெல்லுங்கள்<br /><br />இரண்டு புரியும் உமக்கு<br /><br />ஒன்று : உங்கள் அறியாமை<br />இரண்டு : பிள்ளையர் பெருமை<br /><br />உடைந்தமேகம் முத்துநீர் சிதறினால்<br />ஓடுங்கள் ஓடுங்கள்<br /><br />எங்கே மழையின் கடைசித்துளியோ<br />அங்கே நில்லுங்கள்<br /><br />மழைக்கு வெளியே நின்று<br />மழையை ரசியுங்கள்<br /><br />மழைபெய்த களிமண் நிலமாய்<br />மனம் எப்போதும் நெகிழ்ந்திருக்கட்டும்<br /><br />பணம் கிடந்தால் மட்டுமல்ல-<br />ஓடும்பேருந்தில் ஏறும் பெண்ணின்<br />கூந்தல் பூஉதிர்ந்தாலும்<br />காவல்நிலையம் ஒப்படையுங்கள்<br /><br />மரணம்கூட வித்தியாசமாயிருக்கட்டும்<br /><br />அழாதிருக்கும் ஒவ்வொருவருக்கும்<br />ஆளுக்கொரு கோப்பைத் தேநீர்.Blankhttp://www.blogger.com/profile/05932071295459267171noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-5392858887796987809.post-60990773574924011442010-04-21T06:40:00.000-07:002010-04-21T06:49:36.143-07:00நதிமூலம்<div style="text-align: justify;"><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.main.nc.us/openstudio/gregoryeanes/images/Poet.jpg"><img style="float: right; margin: 0pt 0pt 10px 10px; cursor: pointer; width: 144px; height: 101px;" src="http://www.main.nc.us/openstudio/gregoryeanes/images/Poet.jpg" alt="" border="0" /></a><span style="color: rgb(255, 204, 0);">பூமியோடு மனதுக்கிருக்கும் தொடர்புகளைத் துண்டித்துவிட்டு ஆழ்ந்த உறக்கமெனும் ஆழியில் அமிழ்ந்து ஆழம் நோக்கி உடல் நழுவிக் கொண்டேயிருக்கும் நள்ளிரவுகளில் மாதத்தில் சிலநாள் என் தொலைபேசி அழைக்கும். எடுத்தால் ''நான் கனடாவிலிருந்து கதைக்கறன்'' என்றொரு பெண்குரல் ஒலிக்கும். முகம் தெரியாத அந்த ஈழத்துச் சகோதரி என்னை அடிக்கடி கேட்கும் கேள்வி : ''எப்போதெல்லாம் கவிதை எழுதுகிறீர்கள்? கவிதைக்கு எது உந்து சக்தி'' என்பதுதான். உறக்கக் கலக்கத்தில் ஒரு நாளும் சரியான விடை சொன்னதில்லை. கவிதையில் சொல்ல முடிகிறதா பார்க்கிறேன்.</span><br /></div><br />எப்போதெல்லாம் மனதில்<br />உருவம் தெரியாத<br />பனிமூட்டமொன்று<br />உலவிக் கலைகிறதோ<br /><br />இதயக்கல் எப்போதெல்லாம்<br />குழைந்து குழைந்து<br />கூழாகிறதோ<br /><br />உடனடியாக<br />உருகவில்லையெனில்<br />உயிர் கெட்டிப் பட்டுவிடுமென<br />எப்போதெல்லாம் உள்ளம் எச்சரிக்கிறதோ<br /><br />ஒரு கண்ணீர் ஆறவிட்டு<br />இன்னொரு கண்ணீருக்கு<br />மனது எப்போது தயாராகிறதோ<br /><br />தூக்கம் - விழிப்பு<br />இரண்டுக்கும் மத்தியில்<br />மனமென்னும் பட்டாம்பூச்சி<br />எப்போது பறக்கிறதோ<br /><br />கோபத்தின் சிகரத்தில்<br />துக்கத்தின் அடிவாரத்தில்<br />எப்போது மனது கூடாரமடிக்கிறதோ -<br />அப்போதெல்லாம்<br />எழுதத் தோன்றும்<br /><br />0<br /><br />ஒரு மொட்டு உடையும்<br />சப்தம் கேட்க<br />எப்போது பூமி நிசப்தமாகிறதோ<br /><br />கூட்டுப் பறவைகளின் முதல்பாடல்<br />அதிகாலை இருட்டை<br />எப்போது உடைக்குமோ<br /><br />எப்போதெல்லாம்<br />என் ஜன்னலுக்குப் பக்கத்தில்<br />மழை பெய்கிறதோ<br /><br />ஆற்றுக்குள் யாரோ<br />துணிதுவைக்கும் சுதியில்<br />சேர்ந்தோ சேராமலோ<br />குயில்பேடு எப்போது<br />கூவித் திரியுமோ<br /><br />கூப்பிடுÀரத்தில்<br />கூடவே நிலா வர<br />பழைய சாலை வழி எப்போதெல்லாம்<br />பயணம் நிகழ்கிறதோ<br /><br />அப்போதெல்லாம்<br />எழுதத் தோன்றும்<br /><br />0<br /><br />இந்த பூமியின்<br />ஏதேனுமோர் அசைவு<br />எப்போதென்னை அசைக்கிறதோ<br /><br />சின்னஞ்சிறு வயதுமுதல்<br />உள்நெஞ்சில் அப்பி<br />உறைந்திருக்கும் படிமங்கள்<br />உரிந்துரிந்து<br />எப்போது முகம்காட்டுமோ<br /><br />இதயம் துலக்கும் சில புத்தகங்களால்<br />எப்போது மூளையில் தீச்சுடர் மூளுமோ<br /><br />இயற்கையின் இயற்கையோ<br />மனிதரின் செயற்கையோ<br />இன்னோர் உயிரை<br />எப்போது இம்சிக்குமோ<br /><br />உயிரில் விழுந்த முடிச்சுகளை<br />இசையென்னும் மாயவிரல்<br />எப்போதெல்லாம் அவிழ்க்கிறதோ<br /><br />எப்போதெல்லாம் நான்<br />சாகவில்லையென்பதற்குச்<br />சாட்சி கோரப்படுகிறதோ -<br /><br />அப்போதெல்லாம்<br />எழுதத் தோன்றும்<br /><br />0<br /><br />கடக்கும் பெண்களின்<br />எனக்கான நாணம்<br /><br />இடுகாட்டில் நேரும்<br />இடைக்கால சோகம்<br /><br />குழையும் குழந்தைகளின்<br />உடைந்த சிரிப்பு<br /><br />பூமிக்கிண்ணத்தில்<br />சொட்டிக்கொண்டேயிருக்கும்<br />காலத்துளிகளின் ஓசைகள்<br /><br />நிலத்தில் புதையும் துக்கம்<br />நிலவை முட்டும் உற்சாகம்<br /><br />இவைபோல் இன்னபிற<br />சொல்லும் என்னைக் கவியெழுத.Blankhttp://www.blogger.com/profile/05932071295459267171noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5392858887796987809.post-61421304848184995382010-04-21T04:02:00.000-07:002010-04-21T04:05:14.491-07:00நண்பா உனக்கொரு வெண்பா<div style="text-align: justify;"><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.topnews.in/health/files/Stop-AIDS.JPG"><img style="float: right; margin: 0pt 0pt 10px 10px; cursor: pointer; width: 158px; height: 158px;" src="http://www.topnews.in/health/files/Stop-AIDS.JPG" alt="" border="0" /></a><span style="color: rgb(255, 204, 0);">ஒரு கருத்தை அழுத்தமாகவும் அடர்த்தியாகவும் உணர்த்துவதற்கு ஒரு தமிழ்க் கவிஞனுக்கு வெண்பாவினும் சிறந்த வடிவம் வேறில்லை. காலங்காலமாய்க் கட்டிக் காக்கப்பட்டிருக்கும் வெண்பாவின் கட்டுமானத்தை எய்ட்ஸ் என்னும் உயிர்க்கொல்லி நோய்க்கு எதிரான ஆயுதமாக இதில் ஏந்தியிருக்கிறோம். ஓர் ஏழைப் புலவனின் ஈன முனகல்கூட வெண்பாவில் பதிவு செய்யப்படுகிறபோது அரசு ஆணைக்குரிய கம்àரம் பெற்றுவிடுகிறது. எய்ட்ஸிலிருந்து இளைய தலைமுறையைக் காப்பது கவிதைக்குக் கடமையாகிறது. அதனால் அதை வலிமையான வடிவத்தில் உணர்த்த நினைத்தோம்; வெண்பா வந்து விழுந்தது. எய்ட்ஸ் ஒழிப்பு இயக்கங்களும் அமைப்புகளும் இந்தக் கவிதையை அதன் சொந்த வடிவம் மாறாமல் எந்த வடிவத்திலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று உளமார ஒப்புதல் தருகிறேன்.</span><br /></div><br />ஊரைக் குடிக்கும் உயிர்க்கொல்லி நோயொன்று<br />பாரைக் குடித்துவிடப் பார்க்கிறதே - பாரடா<br />வையத்தில் மானுடம் வாழுமோ என்னுமோர்<br />அய்யத்தில் உள்ளோம் அடா!<br /><br />போதை மருந்தில் பொருந்தாத இன்பத்தில்<br />பாதை வழுவிய பாலுறவில் - காதைக்<br />கழுவாத ஊசி கழிவுரத் தத்தில்<br />நுழையும் உயிர்க்கொல்லி நோய்!<br /><br />இடைகாட்டி மெல்ல இளைய தனத்தின்<br />எடைகாட்டி இன்பம் இழைப்பாள் - மடையா<br />கொலைமகள் ஆகியே கொல்லுவாள் உன்னை<br />விலைமகள் ஆசை விடு!<br /><br />கண்ணுக்குத் தோன்றாத காமக் கிருமிகளோ<br />புண்ணுக்குள் சென்று புலன்கொல்லும் - கண்ணா<br />முறையோடு சேராத மோகம் பிறந்தால்<br />உறையோடு போர்செய்தே உய்!<br /><br />கரைமீறிச் சேர்ந்தாடும் காமக் கலப்பில்<br />உறைமீறி நோய்சேர்வ துண்டே - உறைநம்பிக்<br />கம்மாக் கரையோ கடற்கரையோ தேடாமல்<br />சும்மா இருத்தல் சுகம்!<br /><br />தோகைமார் தந்த சுகநோயோ உன்கட்டை<br />வேகையிலும் விட்டு விலகாதே - ஆகையினால்<br />விற்பனைப் பெண்டிரொடு வேண்டாம் விளையாட்டு<br />கற்பனையை வீட்டுக்குள் காட்டு!<br /><br />கலவிக்குப் போய்வந்த காமத்து நோயைத்<br />தலைவிக்கும் ஈவான் தலைவன் - கலங்காதே<br />காவலனாய் வாய்த்தவனே கண்ணகிக்கு நோய்தந்தால்<br />கோவலனைக் கூசாமல் கொல்!<br /><br />ஓரினச் சேர்க்கை உறவாலே மானுடத்துப்<br />பேரினச் சேர்க்கையே பிய்ந்துவிடும் - பாரில்<br />இயற்கை உறவென்னும் இன்பம் இருக்கச்<br />செயற்கை உறவென்ன சீ!<br /><br />தேன்குடிக்கப் போன திருவிடத்தில் உன்னுடைய<br />ஊன்குடிக்க ஒட்டும் உயிர்க்கொல்லி - ஆண்மகனே!<br />உல்லாச நோய்சிறிய ஓட்டையிலும் உட்புகுமே<br />சல்லாப வாசலைச் சாத்து!<br /><br />மோகக் கிறுக்கில் முறைதவறிப் போனவர்கள்<br />தேகம் இளைத்தபடி தேய்கின்றார் - ஆகப்<br />பொறுப்பற்ற வாழ்வில் புகுந்தபலர் இங்கே<br />உறுப்பற்றுப் போவார் உணர்!<br /><br />பெண்ணின் சதைமட்டும் பேணுகின்ற ஏடுகளைக்<br />கண்ணைக் கெடுக்கும் கலைகளை - இன்றே<br />எரியூட்ட வேண்டும் இளைய குலம்வாழ<br />அறிவூட்ட வேண்டும் அறி!<br /><br /><br />துணையோடு மட்டும் தொடர்கின்ற வாழ்வுக்(கு)<br />இணையாக வேறுமருந் தில்லை - மனைவியெனும்<br />மானிடத்து மட்டுமே மையல் வளர்த்திந்த<br />மானுடத்தை வாழ்விப்போம் வா!Blankhttp://www.blogger.com/profile/05932071295459267171noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-5392858887796987809.post-58429568898075019212010-04-21T03:51:00.000-07:002010-04-21T03:58:50.424-07:00இது போதும் எனக்கு<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.irisquilts.com/images/tn_the%20lovers.jpg"><img style="float: right; margin: 0pt 0pt 10px 10px; cursor: pointer; width: 261px; height: 228px;" src="http://www.irisquilts.com/images/tn_the%20lovers.jpg" alt="" border="0" /></a>அதிகாலை ஒலிகள்<br />ஐந்துமணிப் பறவைகள்<br />இருட்கதவுதட்டும் சூரியவிரல்<br />பள்ளியெழுச்சி பாடும்உன்<br />பாதக்கொலுசு<br />உன் கண்ணில் விழிக்கும்<br />என் கண்கள்<br /><br />இதுபோதும் எனக்கு<br /><br />தண்ணீர் போலொரு வெந்நீர்<br />சுகந்தம் பரப்பும் துவாலை<br />குளிப்பறைக்குள் குற்றாலம்<br />நான் குளிக்க நனையும் நீ<br /><br />இதுபோதும் எனக்கு<br /><br />வெளியே மழை<br />வேடிக்கை பார்க்க ஜன்னல்<br />ஒற்றை நாற்காலி<br />அதில் நீயும் நானும்<br /><br />இதுபோதும் எனக்கு<br /><br />குளத்தங்கரை<br />குளிக்கும் பறவைகள்<br />சிறகு உலர்த்தத்<br />தெறிக்கும் துளிகள்<br />முகம் துடைக்க உன் முந்தானை<br /><br />இதுபோதும் எனக்கு<br /><br />நிலா ஒழுகும் இரவு<br />திசை தொலைத்த காடு<br />ஒற்றையடிப்பாதை<br />உன்னோடு பொடிநடை<br /><br />இதுபோதும் எனக்கு<br /><br />மரங்கள் நடுங்கும் மார்கழி<br />ரத்தம் உறையும் குளிர்<br />உஷ்ணம் யாசிக்கும் உடல்<br />ஒற்றைப் போர்வை<br />பரஸ்பர வெப்பம்<br /><br />இதுபோதும் எனக்கு<br /><br />நிலாத் தட்டு<br />நட்சத்திரச் சோறு<br />கைகழுவக் கடல்<br />கைதுடைக்க மேகம்<br /><br />கனவின் விழிப்பில்<br />கக்கத்தில் நீ<br /><br />இதுபோதும் எனக்கு<br /><br />தபோவனக் குடில்<br />தரைகோதும் மரங்கள்<br />நொண்டியடிக்கும் தென்றல்<br />ஆறோடும் ஓசை<br />வசதிக்கு ஊஞ்சல்<br />வாசிக்கக் காவியம்<br />பக்க அடையாளம் வைக்க<br />உன் கூந்தல் உதிர்க்கும் ஓரிரு பூ<br /><br />இதுபோதும் எனக்கு<br /><br />பூப்போன்ற சோறு<br />பொரிக்காத கீரை<br />காய்ந்த பழங்கள்<br />காய்கறிச் சாறு<br />பரிமாற நீ<br />பசியாற நாம்<br /><br />இதுபோதும் எனக்கு<br /><br />மூங்கில் தோட்டம்<br />மூலிகை வாசம்<br />பிரம்பு நாற்காலி<br />பிரபஞ்ச ஞானம்<br />நிறைந்த மௌனம்<br /><br />நீ பாடும் கீதம்<br /><br />இதுபோதும் எனக்கு<br /><br />அதிராத சிரிப்பு<br />அனிச்சப்பேச்சு<br /><br />உற்சாகப்பார்வை<br />உயிர்ப் பாராட்டு<br /><br />நல்ல கவிதைமேல்<br />விழுந்து வழியும் உன்<br />ஒரு சொட்டுக் கண்ணீர்<br /><br />இருந்தால் போதும்<br />எதுவேண்டும் எனக்கு?Blankhttp://www.blogger.com/profile/05932071295459267171noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-5392858887796987809.post-65332080516446240862010-04-21T03:40:00.000-07:002010-04-21T03:49:47.426-07:00பாடம்<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://t1.gstatic.com/images?q=tbn:qRSt5VDAczomCM:http://i337.photobucket.com/albums/n392/erdy_photos/nature/Art_Nature.jpg"><img style="float: right; margin: 0pt 0pt 10px 10px; cursor: pointer; width: 267px; height: 199px;" src="http://t1.gstatic.com/images?q=tbn:qRSt5VDAczomCM:http://i337.photobucket.com/albums/n392/erdy_photos/nature/Art_Nature.jpg" alt="" border="0" /></a>நீதிமொழி சொன்ன<br />ஆதிமொழி எது?<br /><br />தமிழா? சீனமா?<br />இலத்தீனா? கிரேக்கமா?<br /><br />இல்லை.... எதுவுமில்லை....<br /><br />இயற்கை<br />தன்<br />நெற்றியில்....புருவத்தில்<br />கண்ணில்....கன்னத்தில்<br />மார்பில்....அக்குளில்<br />எழுதிவைத்த நீதியைத்தான்<br />மனிதன் மொழிபெயர்த்தான்<br /><br />மேல்நோக்கி எரியும் தீ -<br />மேல்நோக்கி முட்டும் விதை -<br />மேல்நோக்கி உயரும் முகில் -<br />மேல்நோக்கி வளரும் மனிதன் -<br />எல்லாம் மேல்நோக்கியே!<br /><br />கீழ்நோக்கிப் பொழியும்<br />மழைமட்டும் பொய்த்துவிடின்<br />மேல்நோக்கி வளர்வன<br />பூமியில் ஏது?<br />மழை சொன்னது :<br /><br />''கருணை உள்ளவனே<br />உயிர்களுக்குத்<br />தலைமை தாங்குகிறான்''<br /><br />கரை விழித்திருக்கிறதா?<br />தூங்கிவிட்டதா?<br />தெரியாது<br /><br />பாடத் தெரிந்த பறவைகள்<br />தன் பாடலுக்குக் கைதட்டுமா? கைகொட்டுமா?<br />தெரியாது<br /><br />தாய்மொழியே புரியாத மனிதர்க்குத்<br />தன்பாடல் புரியுமா? புரியாதா?<br />தெரியாது<br /><br />ஆனால் கூழாங்கற்களை<br />வாயில்போட்டுக் கொண்டு<br />நதி பாடிக்கொண்டே போகிறது<br />நதியும் ஒரு £தை சொன்னது :<br /><br />''கடமையைச் செய்<br />பலனை எதிர்பாராதே!''<br /><br />ஏறுவோர் அனைவரையும்<br />குனிந்துவரச் சொல்கிறது<br />இறங்குவோர் அனைவரையும்<br />நிமிர்ந்து செல்லச் செய்கிறது<br /><br />மலை சொன்னது :<br />''பணிந்து வாழ்ந்தால்<br />உயர்ந்து போவாய்<br />நிமிர்ந்து திரிந்தால்<br />இறங்கிப் போவாய்''<br /><br /><br /><br />வேர்களை அறுத்தோடும்<br />நதியின் மீதும்<br />கலகலவென்று பூச்சொரியும்<br />கரையோரத்துக் கிளைகள்...<br />அறுத்ததற்குக் கோபமில்லையாம்<br /><br />நனைத்ததற்கு நன்றியாம்<br /><br /><br />மரம் சொன்னது :<br />''இன்னா செய்தார்க்கும்<br />இனியவை செய்''<br /><br />முகவரி இல்லாமல்<br />பூமிக்கு வருகிறது<br />எங்கே சிப்பி விழித்திருக்கிறதோ<br />அங்கே விழுந்து முத்தாகிறது<br /><br />மழைத்துளி சொன்னது :<br />''முத்துக்கான வித்து<br />எப்போதும் விழலாம்<br />விழித்திரு மனிதா விழித்திரு''<br /><br /><br />கீழே சேறு<br />மேலே பாசி<br /><br />தன்னைச் சுற்றிலும் தவளையர் கீதம்<br />ஆனாலும்<br />தண்ணீர்த் தீயாய் பூத்திருக்கும்<br />தாமரைக்குத்தான்<br />என்னவொரு சௌந்தர்ய கம்àரம்!<br /><br />தாமரை சொன்னது :<br />''சார்பால் பெருமை பெறுவது எளிது<br />சார்புக்குப் பெருமை தருவதே பெரிது''<br />அஸ்தமனம் என்றார்கள்<br />ஆந்தைகள் மகிழ்ந்தன<br /><br />நட்சத்திரங்கள்<br />கும்மி கொட்டிக் கொண்டாடின<br /><br />தான் சாகவில்லை என்பதை<br />நிலவுக்கு ஒளியூட்டி<br />நிரூபித்தது சூரியன்<br /><br />சூரியன் சொன்னது :<br />''மறைந்தும் மறையாதிருக்க<br />உன் சுவடுகளை விட்டுச்செல்''<br /><br />எரிமலை தும்மியது<br />ஐம்பது கிலோ மீட்டர்<br />அக்கினிக் குழம்பு<br /><br />எந்தக் குடிமகனும்<br />இடம் பெயரவில்லை<br /><br />அக்கினிக் குழம்பின் ஆறிய சாம்பலில்<br />உழுது பயிரிட்டதில்<br />ஆறுமடங்கு அமோகவிளைச்சல்<br /><br /><br />எரிமலை சொன்னது :<br />''எந்தவொரு தீமையிலும்<br />இன்னோர் நன்மை உண்டு''Blankhttp://www.blogger.com/profile/05932071295459267171noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-5392858887796987809.post-33799043690890276532010-04-21T03:30:00.000-07:002010-04-21T03:36:02.129-07:00மானுடம் வாழ்கவம்மா!<p><span style=""> </span>''<span lang="TA" style="font-family:Latha;">தேவா!</span><o:p></o:p></p> <p><span lang="TA" style="font-family:Latha;">நாங்கள் புகழ் நிறைந்து வாழ வேண்டும் </span><o:p></o:p></p> <p><span lang="TA" style="font-family:Latha;">எங்கள் மதிப்புக்கும் புகழுக்கும் </span>£<span lang="TA" style="font-family:Latha;">ழே</span><o:p></o:p></p> <p><span lang="TA" style="font-family:Latha;">புனிதம் நிலவ வேண்டும்.</span></p><p><br /><o:p></o:p></p> <p><o:p> </o:p></p> <p><span lang="TA" style="font-family:Latha;">நற்செயலால் கிட்டும் ஆன்மபலத்தால்</span><o:p></o:p></p> <p><span lang="TA" style="font-family:Latha;">எங்கள் ஜீவசக்தி வளர வேண்டும்.</span><o:p></o:p></p> <p><span lang="TA" style="font-family:Latha;">எங்கள் வாழ்வு ஒளிகொண்ட திசைகளாய்ப் </span><o:p></o:p></p> <p><span lang="TA" style="font-family:Latha;">பரந்து விரிந்து ஒளிர்ந்து திகழவேண்டும்.</span><o:p></o:p></p> <p><span lang="TA" style="font-family:Latha;">நலம்தரும் அக்கினிதேவதைகளே!</span><o:p></o:p></p> <p><span lang="TA" style="font-family:Latha;">என் எண்ணத்தில் சொல்லில் தேன்பொழிக!</span><o:p></o:p></p> <p><span lang="TA" style="font-family:Latha;">மக்கள் மத்தியில் நான் பேசுவதெல்லாம்</span><o:p></o:p></p> <p><span lang="TA" style="font-family:Latha;">தேனினிமை கொண்டதாய் அமையுமாறு அருளுங்....</span>''</p><p><br /><o:p></o:p></p> <p><o:p> </o:p></p> <p><span lang="TA" style="font-family:Latha;">- அதர்வண வேதம்<br /></span></p><p><br /><o:p></o:p></p> <p><o:p> </o:p></p> <p><span lang="TA" style="font-family:Latha;">அகோ ஐம்பூதங்களே!</span><o:p></o:p></p> <p><span lang="TA" style="font-family:Latha;">எங்கள் வாகனங்கள் நீங்கள்</span><o:p></o:p></p> <p><span lang="TA" style="font-family:Latha;">எங்கள்மேல் நீங்களே சவாரிசெய்யாதீர்கள்</span><o:p></o:p></p> <p><span lang="TA" style="font-family:Latha;">நீங்களெல்லாம் நெகிழ்ந்துகொடுக்க வேண்டாம்</span><o:p></o:p></p> <p><span lang="TA" style="font-family:Latha;">உங்கள் ரகசியம் அகழ்ந்தெடுக்க</span><o:p></o:p></p> <p><span lang="TA" style="font-family:Latha;">மனிதஜாதிக்கு வலிமை கொடுங்கள்</span></p><p><br /><o:p></o:p></p> <p><o:p> </o:p></p> <p><span lang="TA" style="font-family:Latha;">நிலத்தின் முதல்துகளே!</span><o:p></o:p></p> <p><span lang="TA" style="font-family:Latha;">நீரின் முதல்துளியே!</span><o:p></o:p></p> <p><span lang="TA" style="font-family:Latha;">தீயின் முதற்பொறியே!</span><o:p></o:p></p> <p><span lang="TA" style="font-family:Latha;">காற்றின் முதல் அணுவே!</span><o:p></o:p></p> <p><span lang="TA" style="font-family:Latha;">வானின் முதல் வெளியே!</span><o:p></o:p></p> <p><span lang="TA" style="font-family:Latha;">உங்களின் நீட்சியே நாங்கள்</span></p><p><br /><o:p></o:p></p> <p><o:p> </o:p></p> <p><span lang="TA" style="font-family:Latha;">வணங்குகிறோம்</span></p><p><br /><o:p></o:p></p> <p><o:p> </o:p></p> <p><span lang="TA" style="font-family:Latha;">எம்மால் மாசுறாமல் உம்மையும் </span><o:p></o:p></p> <p><span lang="TA" style="font-family:Latha;">உம்மால் உயிர்கெடாமல் எம்மையும்</span><o:p></o:p></p> <p><span lang="TA" style="font-family:Latha;">காத்தருளுங்கள்</span></p><p><br /><o:p></o:p></p> <p><o:p> </o:p></p> <p><span lang="TA" style="font-family:Latha;">பிறர்க்குச் சிந்தக் </span><o:p></o:p></p> <p><span lang="TA" style="font-family:Latha;">கண்ணீர் கொடுங்கள்</span><o:p></o:p></p> <p><span lang="TA" style="font-family:Latha;">எமக்குச் சிந்த </span><o:p></o:p></p> <p><span lang="TA" style="font-family:Latha;">வேர்வை கொடுங்கள்</span></p><p><br /><o:p></o:p></p> <p><o:p> </o:p></p> <p><span lang="TA" style="font-family:Latha;">எங்கள் போகங்கள் பேணுங்கள்</span></p><p><br /><o:p></o:p></p> <p><o:p> </o:p></p> <p><span lang="TA" style="font-family:Latha;">உமிழ்நீரும் சுக்கிலமும்</span><o:p></o:p></p> <p><span lang="TA" style="font-family:Latha;">வற்றாமற்காக்கும் வரமருளுங்கள்</span></p><p><br /><o:p></o:p></p> <p><o:p> </o:p></p> <p><span lang="TA" style="font-family:Latha;">சக்தியுள்ள வயதிலும்</span><o:p></o:p></p> <p><span lang="TA" style="font-family:Latha;">சந்தர்ப்பமுள்ள பொழுதிலும்</span><o:p></o:p></p> <p><span lang="TA" style="font-family:Latha;">ஒழுக்கம்பழுத்த உள்ளம் கொடுங்கள்</span><o:p></o:p></p> <p><span lang="TA" style="font-family:Latha;">தாங்க முடிந்த தோல்வி கொடுங்கள்</span><o:p></o:p></p> <p><span lang="TA" style="font-family:Latha;">கர்வம் பூசாத வெற்றி கொடுங்கள்</span></p><p><br /><o:p></o:p></p> <p><o:p> </o:p></p> <p><span lang="TA" style="font-family:Latha;">கவரல் ஒழிந்த செல்வம் கொடுங்கள்</span><o:p></o:p></p> <p><span lang="TA" style="font-family:Latha;">பொறாமையுறாத புகழ் கொடுங்கள்</span></p><p><br /><o:p></o:p></p> <p><o:p> </o:p></p> <p><span lang="TA" style="font-family:Latha;">கவிதைகளும் மேகங்களும் </span><o:p></o:p></p> <p><span lang="TA" style="font-family:Latha;">அழைத்தால் பொழியுமாறு அருள்பாலியுங்கள்</span></p><p><br /><o:p></o:p></p> <p><o:p> </o:p></p> <p><span lang="TA" style="font-family:Latha;">மானுடத்தின் </span>£<span lang="TA" style="font-family:Latha;">தங்களைக் </span><o:p></o:p></p> <p><span lang="TA" style="font-family:Latha;">காற்றுக்கு எழுத்தறிவித்துக்</span><o:p></o:p></p> <p><span lang="TA" style="font-family:Latha;">கற்றுக் கொடுங்கள்</span></p><p><br /><o:p></o:p></p> <p><o:p> </o:p></p> <p><span lang="TA" style="font-family:Latha;">மேகத்தின் இடியோ</span><o:p></o:p></p> <p><span lang="TA" style="font-family:Latha;">செய்யாத பழியோ</span><o:p></o:p></p> <p><span lang="TA" style="font-family:Latha;">தலையில் விழாமல் தடுத்தாட்கொள்ளுங்கள்</span></p><p><br /><o:p></o:p></p> <p><o:p> </o:p></p> <p><span lang="TA" style="font-family:Latha;">தாமரையிலைத் திவலைகள் நாங்கள்</span><o:p></o:p></p> <p><span lang="TA" style="font-family:Latha;">கடுகி வீசாவண்ணம்</span><o:p></o:p></p> <p><span lang="TA" style="font-family:Latha;">காற்றை கட்டிவையுங்கள்</span></p><p><br /><o:p></o:p></p> <p><o:p> </o:p></p> <p><span lang="TA" style="font-family:Latha;">எல்லாரும் சிரிக்கின்ற வாழ்வுகொடுங்கள்</span><o:p></o:p></p> <p><span lang="TA" style="font-family:Latha;">எதிரியும் அழுகின்ற மரணம் கொடுங்கள்</span></p><p><br /><o:p></o:p></p> <p><o:p> </o:p></p> <p><span lang="TA" style="font-family:Latha;">எங்கள் வாழ்வின் கோப்பையை</span><o:p></o:p></p> <p><span lang="TA" style="font-family:Latha;">ஊற்றும்போதே உடைத்துவிடாதீர்கள்</span><o:p></o:p></p> <p><span lang="TA" style="font-family:Latha;">நிறைந்தபிறகு வழியவிடுங்கள்.</span></p>Blankhttp://www.blogger.com/profile/05932071295459267171noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5392858887796987809.post-68574219496793851162010-04-21T00:44:00.000-07:002010-04-21T00:45:44.483-07:00வைரமுத்துவின் சுனாமி கவிதை<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.softsailor.com/wp-content/uploads/2010/02/Hawaii-Tsunami4.jpg"><img style="float: right; margin: 0pt 0pt 10px 10px; cursor: pointer; width: 238px; height: 352px;" src="http://www.softsailor.com/wp-content/uploads/2010/02/Hawaii-Tsunami4.jpg" alt="" border="0" /></a>ஏ கடலே<br />உன் கரையில் இதுவரையில்<br />கிளிஞ்சல்கள்தானே சேகரித்தோம்<br />முதன் முதலாய்ப் பிணங்கள் பொறுக்குகிறோம்<br /><br />ஏ கடலே<br />நீ முத்துக்களின் பள்ளத்தாக்கா<br />முதுமக்கள் தாழியா<br /><br />உன் அலை எத்தனை விதவைகளின் வெள்ளைச் சேலை?<br /><br />உன் மீன்களை நங்கள் கூறுகட்டியதற்காக<br />எங்கள் பிணங்களை நீ கூறுகட்டுகிறாய்?<br /><br />அடக்கம் செய்ய ஆளிராதென்றா<br />புதை மணலுக்குள்<br />புதைத்துவிட்டே போய்விட்டாய்?<br /><br />பிணங்களை அடையாளம் காட்டப்<br />பெற்றவளைத் தேடினோம்<br />அவள் பிணத்தையே காணோம்<br /><br />மரணத்தின் மீதே மரியாதை போய்விட்டது<br />பறவைகள் மொத்தமாய் வந்தால் அழகு<br />மரணம்<br />தனியே வந்தால் அழகு<br />மொத்தமாய் வரும் மரணத்தின் மீது<br />சுத்தமாய் மரியாதையில்லை<br /><br />இயற்கையின் சவாலில்<br />அழிவுண்டால் விலங்கு<br /><br />இயற்கையின் சவாலை<br />எதிர்கொண்டால் மனிதன்.Blankhttp://www.blogger.com/profile/05932071295459267171noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-5392858887796987809.post-34996423987975842442010-04-21T00:26:00.000-07:002010-04-21T00:37:16.439-07:00துறக்க முடியாத துறவு<div style="text-align: justify;"><a style="color: rgb(0, 0, 0);" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://frtim.files.wordpress.com/2009/01/crying.jpg"><img style="float: right; margin: 0pt 0pt 10px 10px; cursor: pointer; width: 227px; height: 233px;" src="http://frtim.files.wordpress.com/2009/01/crying.jpg" alt="" border="0" /></a><span style="color: rgb(255, 204, 0);">அந்த நாள் வரும்வரை அவள் அழவில்லை. ஒரு மாலையில் மாலையோடு வந்தபோதுதான் என் மார்பில் சாய்ந்து மாலை மாலையாய் அழுதாள். சென்னை மீனாட்சி மகளிர் கல்லுரியின் தமிழ்த் துறையில் 21 ஆண்டுகள் ஆற்றிய பணியிலிருந்து தன்விருப்ப ஓய்வு கொண்டு விடைகோள் விழா முடிந்து என் மனைவி வீடு வந்தாள். பொன்மணி அழுதுநின்ற போது என் உதடு ஆறுதல் சொன்னது; கவிதை அழுதது.</span><br /></div><br />இருபத்தோராண்டு இல்லறத்தில்<br />மூன்றாம் முறையென்<br />மார்வு நனைப்பவளே!<br /><br />அழாதே கண்மணி<br />குழந்தையல்ல நீ<br />குலுங்கியழ.<br /><br />இது -<br />நீயே எண்ணித்துணிந்த<br />கருமம்தானே?<br />பின் ஏன்<br />உன்னிரு கண்ணில் உப்புமழை?<br /><br />பாகம் பாகமாய்க் கழிவது வாழ்வு<br />முதல்பாகம் முற்றும்<br />இரண்டாம்பாகம் எழுது<br /><br /><br />சிந்திச் சிதறும் உன்<br />கண்ணீர்த்தாரை<br />துக்கமா? சந்தோஷமா?<br />இரண்டுமெனில்<br />எந்தவிழி துக்கம்? எந்தவிழி<br />சந்தோஷம்?<br /><br />இருபத்தோராண்டு<br />இழைபின்னிய பந்தத்தை....<br />சுற்றிச்சுற்றி உனைமொய்க்கும்<br />சுடிதார்ச் சுடர்களை....<br /><br />பாதையோடு பூவிரிக்கும்<br />பவுன்மரங்களை....<br /><br />தோளுரச நடந்துவரும்<br />தோழியரை....<br /><br />கரைந்து கரைந்து<br />குழைந்து குழைந்து - உயிர்<br /><br />குழைத்துக் குழைத்துத்<br />தமிழ்சொன்ன வகுப்பறைகளை....<br /><br />நீயங்கே நட்டுவளர்த்துக்<br />குலைகுலையாய்க் கவிதைகாய்த்த<br />ழூகுயில்தோப்பை<br />இழந்தோம் என்றா<br />அழுதாய் குயிலே<br /><br />நீ இழந்திருப்பது<br />ஒரு பூங்காவை மட்டுமே<br />வாங்கியிருப்பதோ<br />வான மண்டலம்<br /><br />சுதந்திரச் சிறகுக்குள்<br />சுருட்டிவை வானத்தை<br /><br />வீட்டுக்கூரை<br />கல்Âரிக்கூரையன்றி<br />வானம்பார்க்கும் வசதியிழந்தவளே<br /><br />புதியது உலகு புதியது காற்று<br />புதியது சிந்தை புதியது எண்ணம்<br />அறிவு விரிவு செய்<br /><br />ஆழ்வார் அழுகை<br />நாயன்மார் ஏக்கம்<br />சித்தர் கோபம்<br />இவைதாண்டி<br />இன்னும் பலலோகம்<br />இயங்குதல் பார்<br />வா<br />எப்போதும் என்னோடிரு<br />நானெழுதும் பூங்காவில்<br />உனக்கொரு மரமுண்டு<br /><br />பழையன புதியன<br />மீண்டும் பயில்வோம்<br /><br />தேர்வு கருதி<br />இலக்கியம் பயில்வது<br />மூக்கின் வழியே<br />உணவு கொள்வது<br /><br />இனிமேல் படி<br />இலக்கியம் புரியும்<br /><br />ஹோமர் - இளங்கோ<br />வள்ளுவர் - கன்பூசியஸ்<br />கம்பன் - காளிதாசன்<br />பாரதி - nஷல்லி<br />கலைஞர் - பரிமேலழகர்<br />கயாம் - கண்ணதாசன்<br /><br />மாப்பசான் - ஜெயகாந்தன்<br />நீ - நான்<br />ஒப்பிட்டுப் பிரித்து உண்மை தெளிவோம்<br /><br />கலங்காய் துணைக்கிள்ளாய்<br />என்னிரு சிறகும்<br />உன்னொரு கூடு<br /><br />என்மேல் வீசும் பூவெல்லாம்<br />உன் கூந்தலுக்கு<br />எறியும் வேலெல்லாம்<br />என் மார்புக்கு<br /><br />இடி மின்னல் புயல் எனக்கு<br />மழைத்துளி மட்டுமே உனக்கு<br /><br />காற்றை வடிகட்டி<br />சுகந்தம் மட்டுமே நீ<br />சுவாசிக்கத் தருவேன்<br />கற்றது கையளவு<br />படைத்தது நகத்தளவு<br /><br />எழுது<br /><br />வாழ்வு பிழிந்து பொருள்எடு<br />வானம் பிழிந்து மையெடு<br /><br />தமிழின்<br />நீள அகலம் பெருக்கு<br /><br />பாகம் பாகமாய்க் கழிவது வாழ்வு<br />முதல்பாகம் முற்றும்<br />இரண்டாம் பாகம் எழுது<br /><br />கருமணியிற் பாவாய்! உன்<br />கனவுகள் வெல்க<br /><br />உன் கண்ணீர் துடைப்பேன்<br />என் கண்ணில் நீர்மல்க<br /><div style="text-align: justify; color: rgb(255, 204, 0);"><span style="font-size:130%;"><br /><br /></span></div>Blankhttp://www.blogger.com/profile/05932071295459267171noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5392858887796987809.post-20668430818943596232010-04-21T00:06:00.000-07:002010-04-21T00:17:37.155-07:00முதன் முதலாய் அம்மாவுக்கு<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgHKXKmVQ3NaDxQiiYIfCpauNYyrN7PDgoBGkslkY0ncxsp4JWA_mxFTzrXiu4YeUuoXRxNNT88Z-kxXfKNHLKTjNffbRHiYmUer5ObhkKaEFs0zoQELIWR4k1LQD5AoLEmX5xeZ5s0OsMP/s1600/vairamutthu.jpg"><img style="float: right; margin: 0pt 0pt 10px 10px; cursor: pointer; width: 171px; height: 200px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgHKXKmVQ3NaDxQiiYIfCpauNYyrN7PDgoBGkslkY0ncxsp4JWA_mxFTzrXiu4YeUuoXRxNNT88Z-kxXfKNHLKTjNffbRHiYmUer5ObhkKaEFs0zoQELIWR4k1LQD5AoLEmX5xeZ5s0OsMP/s200/vairamutthu.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5462486490602434226" border="0" /></a><span style="font-size:130%;">ஆயிரந்தான் கவிசொன்னேன்<br />அழகழகாப் பொய் சொன்னேன்<br />பெத்தவளே ஒம்பெரு(மை)ம<br />ஒத்தவரி சொல்லலையே!<br /><br />காத்தெல்லாம் மகன்பாட்டு<br />காயிதத்தில் அவன் எழுத்து<br />ஊரெல்லாம் மகன் பேச்சு<br />ஒங்கீர்த்தி எழுதலையே!<br /><br />எழுதவோ படிக்கவோ<br />ஏலாத தாய்பத்தி<br />எழுதிஎன்ன லாபமின்னு<br />எழுதாமாப் போனேனோ?<br /><br />பொன்னையாத் தேவன் பெத்த<br />பொன்னே! குலமகளே!<br />என்னைப் புறந்தள்ள<br />இடுப்புல்வலி பொறுத்தவளே!<br /><br />வைரமுத்து பிறப்பான்னு<br />வயித்தில்நீ சுமந்ததில்ல<br />வயித்தில்நீ சுமந்த ஒண்ணு<br />வைரமுத்து ஆயிருச்சு<br /><br />கண்ணுகாது மூக்கோட<br />கறுப்பா ஒருபிண்டம்<br />இடப்பக்கம் கெடக்கையில<br />என்னென்ன நெனச்சிருப்ப?<br /><br />கத்தி எடுப்பவனோ?<br />களவாணப் பிறந்தவனோ?<br />தரணிஆள வந்திருக்கும்<br />தாசில்தார் இவந்தானோ?<br /><br />இந்த வெவரங்க<br />ஏதொண்ணும் அறியாம<br />நெஞ்சூட்டி வளத்தஒன்ன<br />நெனச்சா அழுகவரும்<br /><br />கதகதன்னு களி(க்) கிண்டி<br />களிக்குள்ள குழிவெட்டி<br />கருப்பட்டி நல்லெண்ண<br />கலந்து தருவாயே<br /><br />தொண்டையில் அதுஎறங்கும்<br />சொகமான எளஞ்சூடு<br />மண்டையில இன்னும்<br />மசமன்னு நிக்கிதம்மா<br /><br />கொத்தமல்லி வறுத்துவச்சுக்<br />குறுமொளகா ரெண்டுவச்சு<br />சீரகமும் சிறுமொளகும்<br />சேத்துவச்சு நீர்தெளிச்சு<br /><br />கும்மி அரச்சு நீ<br />கொழகொழன்னு வழிக்கையிலே<br />அம்மி மணக்கும்<br />அடுத்ததெரு மணமணக்கும்<br /><br />திக்திக்கச் சமச்சாலும்<br />திட்டிக்கிட்டே சமச்சாலும்<br />கத்திரிக்கா நெய்வடியும்<br />கருவாடு தேனொழுகும்<br /><br />கோழிக் கொழம்புமேல<br />குட்டிக்குட்டியா மெதக்கும்<br />தேங்காச் சில்லுக்கு<br />தேகமெல்லாம் எச்சிஊறும்<br /><br />வறுமையில நாமபட்ட<br />வலிதாங்க மாட்டாம(ப்)<br />பேனா எடுத்தேன்<br />பிரபஞ்சம் பிச்செறிஞ்சேன்!<br /><br />பாசமுள்ள வேளையில<br />காசுபணம் கூடலையே!<br />காசுவந்த வேலையிலே<br />பாசம்வந்து சேரலையே!<br /><br />கல்யாணம் நான் செஞ்சு<br />கதியத்து நிக்கையிலே<br />பெத்தஅப்பன் சென்னைவந்து<br />சொத்தெழுதிப் போபபின்னே<br /><br />அஞ்சாறு வருசம்உன்<br />ஆசமொகம் பாக்காமப்<br />பிள்ளைமனம் பித்தாச்சே<br />பெத்தமனம் கல்லாச்சே<br /><br />படிப்புப் படிச்சுக்கிட்டே<br />பணம் அனுப்பி வச்சமகன்<br />கைவிட மாட்டான்னு<br />கடைசியில நம்பலையே!<br /><br />பாசம் கண்ணீரு<br />பழையகதை எல்லாமே<br />வெறிச்சோடி போன<br />வேதாந்த மாயிருச்சே!<br /><br />வைகையில ஊர்முழுக<br />வல்லூறும் சேர்ந்தழுக<br />கைப்பிடியாக் கூட்டிவந்து<br />கரைசேத்து விட்டவளே!<br /><br />எனக்கொண்ணு ஆனதுன்னா<br />ஒனக்குவேற பிள்ளையுண்டு<br />ஒனக்கேதும் ஆனதுன்னா<br />எனக்குவேற தாயிருக்கா?<br /></span><h6 style="font-weight: normal;font-family:verdana;" class="uiStreamMessage"><span style="font-size:130%;"><span style="font-size:130%;"><br /></span><br /></span></h6>Blankhttp://www.blogger.com/profile/05932071295459267171noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-5392858887796987809.post-65689431120770058292010-04-20T23:29:00.000-07:002010-04-21T00:06:18.376-07:00மௌன பூகம்பம்<span style=";font-family:verdana;font-size:130%;" ><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://thumb1.visualizeus.com/thumbs/08/11/04/alone,sad,train,tracks-e20ed2248559e3e110238e31f5ba168d_m.jpg"><img style="float: right; margin: 0pt 0pt 10px 10px; cursor: pointer; width: 215px; height: 184px;" src="http://thumb1.visualizeus.com/thumbs/08/11/04/alone,sad,train,tracks-e20ed2248559e3e110238e31f5ba168d_m.jpg" alt="" border="0" /></a>(தாடியையும், சோகத்தையும் சரிவிகிதத்தில் வளர்த்துக் கொண்டு வாழ்பவன் அவன்.)<br /></span><h6 style="font-weight: normal;font-family:verdana;" class="uiStreamMessage"><span style="font-size:130%;">அவளின் ஞாபகங்களே அவனுக்கு சுவாசம்<br /><br /><br />பன்னிரண்டு பாலைவன வருஷங்களுக்குப் பிறகு<br />அவளை அவன் பார்க்க நேருகிறது.<br />எங்கெனில்..<br />ஒரு ரயில் நிலையத்தில்.<br /><br />எப்போதெனில்..<br />ஒரு நள்ளிரவில்.<br /><br />எதிரெதிர் திசையில் செல்லும் ரயில்கள் இளைப்பாறிக்<br />கொள்ளும் அந்த இடைவெளியில்..<br /><br />ரயில்களின் எதிரெதிர் பெட்டிகளில்<br />பழைய கண்கள் நான்கு பார்த்துக் கொள்கின்றன.<br /><br />அப்பொழுது-<br />மனசில் எத்தனை மௌன பூகம்பம்!)<br />உன்னைப் பார்த்த<br />ஒரு நிமிஷத்தில்<br />இமைகளைக்<br />காணாமல் போட்டு விட்டன<br />கண்கள்.<br /><br />நீதானா?<br />இல்லை-<br />வேறொருவன் கண்களால்<br />நான்<br />பார்ககிறேனா?<br /><br />மனசின் பரப்பெங்கும்<br />பீச்சியடிக்கும் ஒரு<br />பிரவாகம்.<br /><br />இதயத்தின்<br />ஆழத்தில் கிடந்த<br />உன்முகம்<br />மிதந்து மிதந்து<br />மேலே வருகிறது.<br /><br />ஓ!<br />வருஷங்கள் எத்தனையோ<br />வழிந்த பிறகும்..<br />என்<br />மார்பு தடவும்<br />அதே பார்வை..<br /><br />அதே நீ!<br /><br />என் பழையவளே!<br /><br />என்<br />கனவுகளில் அலையும்<br />ஒற்றை மேகமே!<br /><br />உன் நினைவுகளில்<br />நான்<br />எத்தனையாவது பரணில்<br />இருக்கிறேன்?<br /><br />அறிவாயா? என்<br />மீசைக்கும்<br />என்<br />காதலுக்கும்<br />ஒரே வயதென்று<br />அறிவாயா?<br /><br />உன் பெயரை<br />மறக்கடிப்பதில்<br />தூக்க மாத்திரை கூடத்<br />தோற்றுப் போனதே!<br /><br />ஓ!<br />நீ மாறியிருக்கிறாய்.<br />உன்<br />புருவ அடர்த்தி<br />கொஞ்சம்<br />குறைந்திருக்கிறது.<br /><br />உன்<br />சிவப்பில் கொஞ்சம்<br />சிதைந்திருக்கிறது<br />உன்<br />இதழ்களில் மட்டும்<br />அதே<br />பழைய பழச்சிவப்பு.<br /><br />இப்போதும்<br />நாம்<br />பேசப்போவதில்லையா?<br /><br />வார்த்தைகள் இருந்தபோது<br />பிரிந்து போனவர்கள்<br />ஊமையான பிறகு<br />சந்திக்கிறோமா?<br /><br />உன் நினைவுகள்<br />உன் கணவனைப் போலவே<br />உறங்கியிருக்கலாம்.<br />ஆனால்<br />என் நினைவுகள்<br />உன்னைப் போலவே<br />விழித்திருக்கின்றன.<br /><br />ஓ!<br />இந்த<br />ரயில் வெளிச்சம்<br />நீ<br />அழுவதாய் எனக்கு<br />அடையாளம் சொல்கிறதே!<br />வேண்டாம்!<br /><br />விழியில் ஒழுகும்<br />வெந்நீரால்<br />மடியில் உறங்கும்<br />உன்<br />கிளியின் உறக்கத்தைக்<br />கெடுத்து விடாதே!<br /><br />இதோ<br />விசில் சத்தம் கேட்கிறது<br />நம்மில் ஒரு வண்டி<br />நகரப் போகிறது.<br /><br />போய் வருகிறேன்!<br />அல்லது<br />போய்வா!<br />மீண்டும் சந்திப்போம்!<br />விதியை விடவும்<br />நான்<br />ரயிலை நம்புகிறேன்.<br /><br />அப்போது<br />ஒரே ஒரு கேள்விதான்<br />உன்னை நான் கேட்பேன்!<br /><br />"நீயும் என்னைக்<br />காதலித்தாயா?"</span></h6><span style=";font-family:verdana;font-size:130%;" ><br /><br /></span>Blankhttp://www.blogger.com/profile/05932071295459267171noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-5392858887796987809.post-34069799140085353682010-04-20T23:15:00.000-07:002010-04-20T23:28:27.109-07:00கேள் மனமே கேள்<div style="text-align: justify;"><span style="color: rgb(255, 204, 0);font-size:100%;" >1995: பெரியகுளம் - திண்டுக்கல் நெடுஞ்சாலை. ஒரு விழா முடிந்து நண்பர்களோடு காரில் பயணித்துக் கொண்டிருக்கிறேன். விழாவில் வழங்கப்பட்ட நினைவுப் பரிசைப் பிரித்துப் பார்க்கிறார் நண்பர் ஒருவர். அது ஒரு வெள்ளிக் குத்துவிளக்கு. நல்ல வெள்ளிதானா என்று தேய்த்துப் பார்க்கிறார் இன்னொரு நண்பர். "விளக்கை அதிகம் தேய்க்காதீர்கள்; பூதம் வந்துவிடப் போகிறது" என்று சிரிக்கிறேன் நான். அப்படி பூதம் வந்துவிட்டால் யார் யார் என்னென்ன கேட்பார்கள் என்ற சுவையான கற்பனை தொடங்க ஒவ்வொருவரும் ஒவ்வொன்று கேட்கிறார்கள். கடைசியில் கேள்வி எனக்கு வருகிறது. காரை நிறுத்துங்கள் என்கிறேன். ஒரு புளிய மரத்தடி. தாள் கொடுங்கள் என்கிறேன்; தாள் இல்லை. அழைப்பிதழ்களின் வெள்ளைப் பக்கங்களில் எழுதத் தொடங்குகிறேன். எழுத வசதி எண்சீர் விருத்தம், புளிய மரத்தடியில் பூத்த கவிதை இது. -வைரமுத்து</span><br /></div><br />சத்தங்கள் இல்லாத தனிமை கேட்பேன்<br />சரஞ்சரமாய் வந்துவிழும் வார்த்தை கேட்பேன்<br />ரத்தத்தில் எப்போதும் வேகம் கேட்பேன்<br />ரகசியங்கள் இல்லாத வாழ்க்கை கேட்பேன்<br />சுத்தத்தைக் கொண்டாடும் சூழல் கேட்பேன்<br />சுடர்விட்டுப் பொலிகின்ற ஞானம் கேட்பேன்<br />யுத்தங்கள் இல்லாத உலகம் கேட்பேன்<br />உலகெங்கும் சம்பங்கு மழையைக் கேட்பேன்<br /><br />கண்ணிரண்டில் முதுமையிலும் பார்வை கேட்பேன்<br />கடைசிவரை கேட்கின்ற செவிகள் கேட்பேன்<br />பின்னிரவில் விழிக்காத தூக்கம் கேட்பேன்<br />பிழையெல்லாம் மன்னிக்கும் பெருமை கேட்பேன்<br />வெண்ணிலவில் நனைகின்ற சாலை கேட்பேன்<br />விண்மீனை மறைக்காத வானம் கேட்பேன்<br />மென்காற்று வீசிவரும் இல்லம் கேட்பேன்<br />மின்சாரம் போகாத இரவு கேட்பேன்<br /><br />தன்னலங்கள் தீர்ந்துவிடும் இதயம் கேட்பேன்<br />தங்கத்தைச் செங்கல்லாய் காணக் கேட்பேன்<br />விண்வெளியில் உள்ளதெல்லாம் அறியக் கேட்பேன்<br />விஞ்ஞானம் பொதுவுடைமை ஆகக் கேட்பேன்<br />மண்ணுலகம் கண்ணீரை ஒழிக்கக் கேட்பேன்<br />மனிதஇனம் செவ்வாயில் வசிக்கக் கேட்பேன்<br />பொன்னுலகம் பூமியிலே தோன்றக் கேட்பேன்<br />போர்க்களத்தில் பூஞ்செடிகள் பூக்கக் கேட்பேன்<br /><br />கோடையிலும் வற்றாத குளங்கள் கேட்பேன்<br />குளத்தோடு கமலப்பூக் கூட்டம் கேட்பேன்<br />மேடையிலே தோற்காத வீரம் கேட்பேன்<br />மேதைகளை சந்திக்கும் மேன்மை கேட்பேன்<br />வாடையிலும் நடுங்காத தேகம் கேட்பேன்<br />வாவென்றால் ஓடிவரும் கவிதை கேட்பேன்<br />பாடையிலே போகையில்என் பாடல் கேட்டால்<br />பட்டென்று விழிக்கின்ற ஆற்றல் கேட்பேன்<br /><br />அதிராத குரல்கொண்ட நண்பர் கேட்பேன்<br />அளவோடு பேசுகின்ற பெண்கள் கேட்பேன்<br />உதிராத மலர்கொண்ட சோலை கேட்பேன்<br />உயிர்சென்று தடவுகின்ற தென்றல் கேட்பேன்<br />முதிராத சிறுமிகளின் முத்தம் கேட்பேன்<br />மோகனத்து வீணைகளின் சத்தம் கேட்பேன்<br />பதினாறு வயதுள்ள உள்ளம் கேட்பேன்<br />பறவையோடு பேசுமொரு பாஷை கேட்பேன்<br /><br />முப்பதுநாள் காய்கின்ற நிலவைக் கேட்பேன்<br />முற்றத்தில் வந்தாடும் முகிலைக் கேட்பேன்<br />எப்போதும் காதலிக்கும் இதயம் கேட்பேன்<br />இருக்கும்வரை வழங்கவரும் செல்வம் கேட்பேன்<br />தப்பேதும் நேராத தமிழைக் கேட்பேன்<br />தமிழுக்கே ஆடுகின்ற தலைகள் கேட்பேன்<br />இப்போது போலிருக்கும் இளமை கேட்பேன்<br />இருந்தாலும் அறிவுக்கு நரைகள் கேட்பேன்<br /><br />வானளந்த தமிழ்த்தாயின் பாலைக் கேட்பேன்<br />வைகைநதி புலவர்களின் மூளை கேட்பேன்<br />தேனளந்த தமிழ்ச்சங்க ஓலை கேட்பேன்<br />தென்னாழி தின்றதமிழ்த் தாளைக் கேட்பேன்<br />மானமகன் குட்டுவனின் வில்லைக் கேட்பேன்<br />மாமன்னன் பாண்டியனின் வேலைக் கேட்பேன்<br />ஞானமகன் வள்ளுவனின் கோலைக் கேட்பேன்<br />ராஜராஜன் வைத்திருந்த வாளைக் கேட்பேன்Blankhttp://www.blogger.com/profile/05932071295459267171noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5392858887796987809.post-33390705633448186662010-04-20T21:29:00.000-07:002010-04-20T21:32:33.255-07:00கால வித்தியாசம்<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.deviantart.com/download/49238724/The_human_mind_by_dotLinks.jpg"><img style="float: right; margin: 0pt 0pt 10px 10px; cursor: pointer; width: 315px; height: 392px;" src="http://www.deviantart.com/download/49238724/The_human_mind_by_dotLinks.jpg" alt="" border="0" /></a><br /><span style="font-size:100%;">ஓடை நீரில் மீன்கள் பின்னால்<br />ஓடித் திரிந்த்த(து) ஒரு காலம்<br />கோடை மணலில் கால்கள் வெந்து<br />குழைந்து போனதும் ஒரு காலம்<br /><br />ஈசாப் நீதிக் கதைகளுக் குள்ளே<br />இதயம் கரைந்தது ஒரு காலம்<br />பேசா திருக்கும் பிரபஞ்சமே ஒரு<br />புத்தகமானதும் ஒரு காலம்<br /><br />சில்லிப் பூக்களில் தேனைத் தேடித்<br />துள்ளித் திரிந்தது ஒரு காலம்<br />எல்லாம் இருந்தும் நேரமில்லாமல்<br />எட்டித் தள்ளுவ தொருகாலம்<br /><br />ஆகயத்தைத் தொட்டுப் பிடிக்கும்<br />ஆர்ப்பாட்டங்கள் ஒரு காலம்<br />ஆகாயத்தை நெஞ்சுக்குள்ளே<br />அழைத்துக் கொண்டதும் ஒரு காலம்<br /><br />பண்ந்தான் உந்தன் எஜமான் என்று<br />பதறித் திரிந்தது ஒரு காலம்<br />பணந்தான் உந்தன் சேவகன் என்று<br />பாடங் கண்டதும் ஒரு காலம்<br /><br />அதுவோ இதுவோ எதுவோ என்றே<br />ஆசை வளர்த்ததும் ஒரு காலம்<br />இதற்குத் தான இவ்வள வென்றே<br />இடுப்பைப் பிடித்ததும் ஒரு காலம்<br /><br />காதல் இன்றேல் சாதல் என்றே<br />கவிதை சொன்னதும் ஒரு காலம்<br />காதல் என்பது ச்ந்தர்ப்பம்தான்<br />கண்டு தெளிந்ததும் ஒரு காலம்<br /><br />சொல்லிச் சொல்லி உணவு சமைத்துத்<br />தொப்பை வளர்த்தடும் ஒரு காலம்<br />மில்லிகிராமில் உணவை அளந்து<br />மென்று முடிப்பதும் ஒரு காலம்<br /><br />தன்னை வெல்ல ஆளில்லை என்றே<br />தருக்கித் திரிவதும் ஒரு காலம்<br />சின்னக் குழயில் காற்றைச் செலுத்தி<br />ஜீவன் வளர்ப்பதும் ஒரு காலம்<br /><br />பூமி தனக்கே சொந்தம் என்று<br />புலம்பித் திரிவதும் ஒரு காலம்<br />பூமிக்கே நீ சொந்தம் என்று<br />புரிந்து தெளிவதும் ஒரு காலம்<br />ஓடை நீரில் மீன்கள் பின்னால்<br />ஓடித் திரிந்த்த(து) ஒரு காலம்<br />கோடை மணலில் கால்கள் வெந்து<br />குழைந்து போனதும் ஒரு காலம்<br /><br />ஈசாப் நீதிக் கதைகளுக் குள்ளே<br />இதயம் கரைந்தது ஒரு காலம்<br />பேசா திருக்கும் பிரபஞ்சமே ஒரு<br />புத்தகமானதும் ஒரு காலம்<br /><br />சில்லிப் பூக்களில் தேனைத் தேடித்<br />துள்ளித் திரிந்தது ஒரு காலம்<br />எல்லாம் இருந்தும் நேரமில்லாமல்<br />எட்டித் தள்ளுவ தொருகாலம்<br /><br />ஆகயத்தைத் தொட்டுப் பிடிக்கும்<br />ஆர்ப்பாட்டங்கள் ஒரு காலம்<br />ஆகாயத்தை நெஞ்சுக்குள்ளே<br />அழைத்துக் கொண்டதும் ஒரு காலம்<br /><br />பண்ந்தான் உந்தன் எஜமான் என்று<br />பதறித் திரிந்தது ஒரு காலம்<br />பணந்தான் உந்தன் சேவகன் என்று<br />பாடங் கண்டதும் ஒரு காலம்<br /><br />அதுவோ இதுவோ எதுவோ என்றே<br />ஆசை வளர்த்ததும் ஒரு காலம்<br />இதற்குத் தான இவ்வள வென்றே<br />இடுப்பைப் பிடித்ததும் ஒரு காலம்<br /><br />காதல் இன்றேல் சாதல் என்றே<br />கவிதை சொன்னதும் ஒரு காலம்<br />காதல் என்பது ச்ந்தர்ப்பம்தான்<br />கண்டு தெளிந்ததும் ஒரு காலம்<br /><br />சொல்லிச் சொல்லி உணவு சமைத்துத்<br />தொப்பை வளர்த்தடும் ஒரு காலம்<br />மில்லிகிராமில் உணவை அளந்து<br />மென்று முடிப்பதும் ஒரு காலம்<br /><br />தன்னை வெல்ல ஆளில்லை என்றே<br />தருக்கித் திரிவதும் ஒரு காலம்<br />சின்னக் குழயில் காற்றைச் செலுத்தி<br />ஜீவன் வளர்ப்பதும் ஒரு காலம்<br /><br />பூமி தனக்கே சொந்தம் என்று<br />புலம்பித் திரிவதும் ஒரு காலம்<br />பூமிக்கே நீ சொந்தம் என்று<br />புரிந்து தெளிவதும் ஒரு காலம்</span>Blankhttp://www.blogger.com/profile/05932071295459267171noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5392858887796987809.post-11918271875477035312010-04-20T09:05:00.000-07:002010-04-20T09:10:05.859-07:00கனாக் கண்டேன் தோழா<span style="font-size:100%;"><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.independentshopping.ie/productimages/2166_DreamMat.jpg"><img style="float: right; margin: 0pt 0pt 10px 10px; cursor: pointer; width: 300px; height: 300px;" src="http://www.independentshopping.ie/productimages/2166_DreamMat.jpg" alt="" border="0" /></a></span><span style="font-size:100%;"><span style="font-family:aAvarangal;">கனவெனப் படுவது<br />மனதின் நீட்சி<br /><br />அது<br />ஆழியளக்கும் நாழி<br />பொய்யில் பூத்த நிஜம்<br />அன்றி<br />நிஜத்தில் மலரும் பொய்<br /><br /></span><b><span style="font-family:Arial;"> <span style="color: rgb(255, 0, 0);">*</span> <span style="color: rgb(0, 128, 0);">* </span><span style="color: rgb(255, 153, 0);">*</span> <span style="color: rgb(0, 128, 0);">*</span> <span style="color: rgb(255, 0, 0);">*</span></span></b></span> <span style="font-size:100%;"><span style="color: rgb(255, 0, 0);font-family:aAvarangal;" > </span><span style="font-family:aAvarangal;"><br />என் கனவுகள்<br />வினோதமானவை<br /><br />கோளங்களற்ற பெருவெளியில்<br />உட்கார இடம்தேடுமொரு<br />பட்டாம்பூச்சியும்<br /><br />வீழ ஒரு தளமின்றிப்<br />பயணித்துக் கொண்டேயிருக்கும்<br />அனாதை மழைத்துளியும்<br /><br />வாரம் ஒருமுறை வந்துபோகும்<br />என் கனவில்<br /><br /></span><b><span style="font-family:Arial;"> <span style="color: rgb(255, 0, 0);">*</span> <span style="color: rgb(0, 128, 0);">* </span><span style="color: rgb(255, 153, 0);">*</span> <span style="color: rgb(0, 128, 0);">*</span> <span style="color: rgb(255, 0, 0);">*</span></span></b></span> <span style="font-size:100%;"><span style="color: rgb(255, 0, 0);font-family:aAvarangal;" > </span><span style="font-family:aAvarangal;"><br />ஆயிரம்மைல் நீளத்தில்<br />உலகராணுவ ஊர்வலம்<br /><br />அது<br />அலையற்ற ஒரு கடலில் முடிகிறது<br /><br />ஒவ்வொரு வீரனும்<br />கைக்கொண்ட ஆயுதம்<br />கடலில் எறிகிறான்<br /><br />எறிந்த ஆயுதம்<br />விழுந்த இடத்தில்<br />ஆளுக்கொரு கலப்பை<br />ஆளுக்கொரு ரோஜாப்பூ<br />மிதந்து மிதந்து மேலேறி வருகிறது<br /><br />ஒருமுறை கண்டும்<br />மறவாத கனவிது<br /><br /></span><b><span style="font-family:Arial;"> <span style="color: rgb(255, 0, 0);">*</span> <span style="color: rgb(0, 128, 0);">* </span><span style="color: rgb(255, 153, 0);">*</span> <span style="color: rgb(0, 128, 0);">*</span> <span style="color: rgb(255, 0, 0);">*</span></span></b></span> <span style="font-size:100%;"><span style="color: rgb(255, 0, 0);font-family:aAvarangal;" > </span><span style="font-family:aAvarangal;"><br />மேகத்தில் ரத்தம்<br />பூக்களில் மாமிசம்<br />கத்தியில் கண்ணீர்<br />வழிந்தன கனவில்<br /><br />கண்கசக்கி விழிக்குமுன்<br />ஜாதிக்கலவரம்<br /><br /></span><b><span style="font-family:Arial;"> <span style="color: rgb(255, 0, 0);">*</span> <span style="color: rgb(0, 128, 0);">* </span><span style="color: rgb(255, 153, 0);">*</span> <span style="color: rgb(0, 128, 0);">*</span> <span style="color: rgb(255, 0, 0);">*</span></span></b></span> <span style="font-size:100%;"><span style="color: rgb(255, 0, 0);font-family:aAvarangal;" > </span></span> <p style="margin-top: 0pt; margin-bottom: 0pt;"><span style="font-size:100%;"><span style="font-family:aAvarangal;"> கொம்பு முளைத்த<br />புலியன்று துரத்தும்<br /><br />ஆற்றில் விழுந்து<br />சேற்றில் புதைவேன்<br /><br />கிட்ட இருக்கும் மரத்தின் வேர்<br />என்ன முயன்றும் எட்டவே எட்டாது<br /><br />எழுந்து... எழுந்து... அழுந்தி... அழுந்தி...<br /><br />பரீட்சை மாதம் அதுவென்பதை<br />எங்ஙன்ம் அறியுமோ என் கனவு?<br /><br /></span><b><span style="font-family:Arial;"> <span style="color: rgb(255, 0, 0);">*</span> <span style="color: rgb(0, 128, 0);">* </span><span style="color: rgb(255, 153, 0);">*</span> <span style="color: rgb(0, 128, 0);">*</span> <span style="color: rgb(255, 0, 0);">*</span></span></b></span> <span style="font-size:100%;"><span style="color: rgb(255, 0, 0);font-family:aAvarangal;" > </span></span> </p> <p style="margin-top: 0pt; margin-bottom: 0pt;"><span style="font-size:100%;"><span style="font-family:aAvarangal;"> போக்குவரத்துக்கிடமின்றிச்<br />சாலைகள் எல்லாம்<br />தானிய மூட்டைகள்<br /><br />மூட்டைகளுக்கடியில்<br />நசுங்கிச் செத்த பிச்சைக்காரர்கள்<br /><br />பொருளாதாரமும்<br />புரியும் என் கனவுக்கு<br /><br /></span><b><span style="font-family:Arial;"> <span style="color: rgb(255, 0, 0);">*</span> <span style="color: rgb(0, 128, 0);">* </span><span style="color: rgb(255, 153, 0);">*</span> <span style="color: rgb(0, 128, 0);">*</span> <span style="color: rgb(255, 0, 0);">*</span></span></b></span> </p><p style="margin-top: 0pt; margin-bottom: 0pt;"><span style="font-size:100%;"><br /></span></p><p style="margin-top: 0pt; margin-bottom: 0pt;"><span style="font-size:100%;"><span style="font-family:aAvarangal;">மேலே<br />மேலே<br />மேலே<br />மேலே<br />பறக்கிறேன்<br /><br />எங்கிருந்தோ ஓர் அம்புவந்து<br />இறக்கை உடைத்து இரைப்பை கிழிக்கக்<br />கீழே<br />கீழே<br />கீழே<br />கீழே<br />விழுகிறேன்<br /><br />ஒரு கையில் வாளும்<br />ஒரு கையில் வீணையும் கொண்ட<br />பெண்ணொருத்தி<br />என்னைத் தன் மடியில் ஏந்திக்கொள்கிறாள்<br /><br />அடிக்கடி தோன்றும்<br />அதிகாலைக் கனவிது<br />அவள்<br />முகம்பார்க்குமுன் முடிந்துபோகிறது<br /><br /></span><b><span style="font-family:Arial;"> <span style="color: rgb(255, 0, 0);">*</span> <span style="color: rgb(0, 128, 0);">* </span><span style="color: rgb(255, 153, 0);">*</span> <span style="color: rgb(0, 128, 0);">*</span> <span style="color: rgb(255, 0, 0);">*</span></span></b></span> <span style="font-size:100%;"><span style="color: rgb(255, 0, 0);font-family:aAvarangal;" > </span><span style="font-family:aAvarangal;"><br />வெயிலஞ்சும் பாலைவனம்<br />வெறுங்காலொடொரு சிறுமி<br />அவளுக்கு மட்டும்<br />குடைபிடிக்கும் ஒரு மேகம்<br /><br />அவள் நடந்தால் நகரும்<br />நின்றால் நிற்கும்<br /><br />இன்றவள்<br />எங்குற்றாளோ?<br />என்னவானாளோ?<br />இன்று<br />இருந்தால் அவளுக்கு<br />இருபத்தொரு வயதிருக்கும்<br /><br /></span><b><span style="font-family:Arial;"> <span style="color: rgb(255, 0, 0);">*</span> <span style="color: rgb(0, 128, 0);">* </span><span style="color: rgb(255, 153, 0);">*</span> <span style="color: rgb(0, 128, 0);">*</span> <span style="color: rgb(255, 0, 0);">*</span></span></b></span> <span style="font-size:100%;"><span style="color: rgb(255, 0, 0);font-family:aAvarangal;" > </span><span style="font-family:aAvarangal;"><br />ஷேக்ஸ்பியர் வீடு...<br /><br />பிரம்பு வாத்தியார்...<br /><br />பிரபாகரன் தொப்பி...<br /><br />கம்பங்கொல்லைக் குருவி...<br /><br />கலைஞர் கண்ணாடி...<br /><br />ராத்திரிவானவில்...<br /><br />அராபத்தின் குழந்தை...<br /><br />டயானாவின் முழங்கால்...<br /><br />கொடைக்கானல் மேகம்...<br /><br />வீட்டில் வெட்டிய ஆட்டின் தலை...<br /><br />இப்படி...<br />அறுந்தறுந்துவரும் கனவுகள் ஆயிரம்<br /><br /></span><b><span style="font-family:Arial;"> <span style="color: rgb(255, 0, 0);">*</span> <span style="color: rgb(0, 128, 0);">* </span><span style="color: rgb(255, 153, 0);">*</span> <span style="color: rgb(0, 128, 0);">*</span> <span style="color: rgb(255, 0, 0);">*</span></span></b></span> <span style="font-size:100%;"><span style="color: rgb(255, 0, 0);font-family:aAvarangal;" > </span><span style="font-family:aAvarangal;"><br />கடந்த சில காலமாய்<br />இப்படியோர் கனவு<br /><br />இமயமலை - பனிப்பாளம்<br />தலை இல்லாத ஒற்றை மனிதன்<br />ஏந்தி நடக்கிறான் தேசியக்கொடியை<br /><br />அடிவாரத்தில்<br />கோடி ஜனங்கள் கைதட்டுகிறார்கள்<br />நிர்வாணம் மறைத்த கையை எடுத்து<br /><br />என்ன கனவிது?<br /><br />வேதாந்தமாக விரித்துப் பொருளுரைக்க<br />யாதானும் சற்றே இடமிருந்தால் கூறீரோ?<br /><br /></span><b><span style="font-family:Arial;"> <span style="color: rgb(255, 0, 0);">*</span> <span style="color: rgb(0, 128, 0);">* </span><span style="color: rgb(255, 153, 0);">*</span> <span style="color: rgb(0, 128, 0);">*</span> <span style="color: rgb(255, 0, 0);">*</span></span></b></span> </p>Blankhttp://www.blogger.com/profile/05932071295459267171noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5392858887796987809.post-22794784385569894602010-04-20T09:01:00.001-07:002010-04-20T09:02:13.684-07:00குளக்கரை<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiNeqqk-w7zannOIq-a6UYWvBgR9dVHdhxXXHy-bOv1xO0hqNwZ1oCzCDQDwjCiyQdbNDB2u3809WhxI5_p-2owcwbF9Ve9NejIe_pLWAnEJhBAI0nX28-wUJzwfWXOh8tICnyxFhGdW54/s320/lake.jpg"><img style="float: right; margin: 0pt 0pt 10px 10px; cursor: pointer; width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiNeqqk-w7zannOIq-a6UYWvBgR9dVHdhxXXHy-bOv1xO0hqNwZ1oCzCDQDwjCiyQdbNDB2u3809WhxI5_p-2owcwbF9Ve9NejIe_pLWAnEJhBAI0nX28-wUJzwfWXOh8tICnyxFhGdW54/s320/lake.jpg" alt="" border="0" /></a><span style="font-size: 9pt;font-family:aAvarangal;" >முப்பத்தேழாண்டுகள் முடிந்தோடின<br /> இந்தக் குளக்கரையில் நான் நடந்து<br /> <br /> இன்றுதான் மீண்டும்<br /> நடைபயில்கிறேன்<br /> <br /> காலில் பரவசம்<br /> நெஞ்சில் வலி<br /> <br /> அன்று கூவிய பறவைகளில்<br /> ஒன்றையும் காணோம்!<br /> <br /> எந்த மழையில்<br /> எந்தக் கோடையில்<br /> மாண்டிருக்குமோ?<br /> <br /> அன்று குடைபிடித்த மரங்களில்<br /> ஏதுமில்லை இப்போது<br /> கதவாய் - சாம்பலாய்<br /> எவ்வடிவம் பூண்டனவோ?<br /> <br /> உள்ளிருந்த அல்லிகள்<br /> பூண்டற்று அழிந்தன<br /> இலங்கைத் தமிழராய்<br /> இடம்பெயர்ந்து போயினவோ?<br /> <br /> அன்று<br /> சேலையைக் கல்லிலும்<br /> மார்பால் மனசையும்<br /> துவைத்துப் பிழிந்த பெண்கள்<br /> மூத்து முதிர்ந்தாரோ<br /> செத்தழிந்து போனாரோ?<br /><br /></span><p style="margin-top: 0pt; margin-bottom: 0pt;" align="justify"><span style="font-size: 9pt;font-family:aAvarangal;" > அன்று<br />தத்தியெறிந்த தவளைக்கல்<br />தூர்வாரக் குளத்தாழத்தில்<br />கிடக்குமோ? கிடக்காதோ?</span></p> <p style="margin-top: 0pt; margin-bottom: 0pt;" align="justify"> </p> <span style="font-size: 9pt;font-family:aAvarangal;" > இப்போதென் நுரையீரல் நிறைப்பது<br />சேற்றுமணம் சுமந்த பழைய காற்றோ?<br />புழுதிசுமந்த புதிய காற்றோ?<br /><br />அதோ<br />ஆங்கிலத்தின் கடைசி எழுத்தைப்போல்<br />வளைந்து நாற்றுநடும் மூதாட்டிகள்<br />நான் அன்றுகண்ட மங்கையரோ<br />இல்லை<br />முப்பது வயதில் முதுமைக்கு வந்தவரோ?<br /><br />அன்று<br />குளத்தில் தொலைந்த மஞ்சள் ஓரணா<br />இன்று முக்குளித்தால்<br />கிட்டுமோ? கிட்டாதோ?<br /><br />பூமியின் முகத்தில்<br />காலத்தின் கீறல்கள்<br />எல்லாம் எல்லாம்<br />மாறித் தேய்ந்தன<br /><br />ஆனாலும்<br />நம்பிக்கையோடு தேடுகிறேன்<br />குளக்கரையில் பதிந்த என்<br />பிஞ்சுக்கால் தடங்களை<br /><br /></span> <b><span style="font-family:Arial;"> <span style="color:#ff0000;">*</span> <span style="color:#008000;">* </span><span style="color:#ff9900;">*</span> <span style="color:#008000;">*</span> <span style="color:#ff0000;">*</span></span></b>Blankhttp://www.blogger.com/profile/05932071295459267171noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5392858887796987809.post-75458639942344364672010-04-20T08:53:00.000-07:002010-04-20T08:55:13.390-07:00சொல்லதிகாரம்<span style=";font-family:aAvarangal;font-size:100%;" >'கொல்' 'கொள்ளையடி'<br /> சரித்திரம் அதிகம் கேட்ட வார்த்தைகள்<br /> <br /> ''தழுவு'' ''முத்தமிடு''<br /> கட்டில்கள் அதிகம் கேட்ட வார்த்தைகள்<br /> <br /> ''ஆராரோ'' ''சனியனே''<br /> தொட்டில்கள் அதிகம் கேட்ட வார்த்தைகள்<br /> <br /> ''உனக்கெப்போது கல்யாணம்?''<br /> விலைமகள் அதிகம் கேட்ட வார்த்தைகள்<br /> <br /> ''உருப்போடு'' - உருப்படமாட்டாய்''<br /> வகுப்பறைகள் அதிகம் கேட்ட வார்த்தைகள்<br /> <br /> ''இன்னொரு ஜென்மம்<br /> என்றொன்றிருந்தால்''<br /> பூங்காக்கள் அதிகம் கேட்ட வார்த்தைகள்<br /> <br /> ''கடைசியாய் எல்லாரும்<br /> முகம்பார்த்துக் கொள்ளுங்கள்''<br /> மயானங்கள் அதிகம் கேட்ட வார்த்தைகள்<br /> <br /> ''சவால் விடுகிறேன் - சபதம் செய்கிறேன்'<br /> மேடைகள் அதிகம் கேட்ட வார்த்தைகள்<br /> <br /> 'பாலாறு - தேனாறு'<br /> பொதுஜனம் அதிகம் கேட்ட வார்த்தைகள்<br /> <br /> ''மறக்காமல் கடிதம் போடு''<br /> ரயிலடிகள் அதிகம் கேட்ட வார்த்தைகள்<br /> <br /> ''அய்யா குளிக்கிறார்''<br /> தொலைபேசி அதிகம் கேட்ட வார்த்தைகள்<br /> <br /> 'அப்பா கோபமாயிருக்கிறார்'<br /> குழந்தைகள் அதிகம் கேட்ட வார்த்தைகள்<br /> <br /> 'தயவுசெய்து' - 'மன்னியுங்கள்'<br /> ஐரோப்பா அதிகம் கேட்ட வார்த்தைகள்<br /> <br /> ''நேற்றே வந்திருக்கக் கூடாதா''<br /> கடன் கேட்போன் அதிகம் கேட்ட வார்த்தைகள்<br /> <br /> 'இனிமேல் ஆண்டவன் விட்ட வழி'<br /> மருத்துவமனைகள் அதிகம் கேட்ட வார்த்தைகள்</span> <p style="margin-top: 0pt; margin-bottom: 0pt;"> </p> <p style="margin-top: 0pt; margin-bottom: 0pt;"> <span style="font-size:100%;"><b><span style="font-family:Arial;"> <span style="color: rgb(255, 0, 0);">*</span> <span style="color: rgb(0, 128, 0);">* </span><span style="color: rgb(255, 153, 0);">*</span> <span style="color: rgb(0, 128, 0);">*</span> <span style="color: rgb(255, 0, 0);">*</span></span></b></span><span style="font-size:100%;"><span style="color: rgb(255, 0, 0);font-family:aAvarangal;" > </span></span><span style=";font-family:aAvarangal;font-size:100%;" ><br /> போதுமடா சாமி!<br /> போதும்! போதும்!<br /> <br /> ஒரே கல்லில் துவைத்துத் துவைத்துச்<br /> சாயம் போயின வார்த்தையின் நிறங்கள்<br /></span></p> <p style="margin-top: 0pt; margin-bottom: 0pt;"><span style=";font-family:aAvarangal;font-size:100%;" > இனி ஒவ்வொரு சொல்லையும்<br /> ஒட்டடை தட்டுவோம்</span></p><p style="margin-top: 0pt; margin-bottom: 0pt;"><span style="font-size:100%;"><br /></span></p><p style="margin-top: 0pt; margin-bottom: 0pt;"><span style=";font-family:aAvarangal;font-size:100%;" > இனிமேல் வார்த்தைகளை<br />இடம் மாற்றிப் போடுவோம்<br /><br />அத்தனை சொல்லிலும்<br />ஆக்சிஜன் ஏற்றுவோம்<br /><br />வார்த்தை மாறினால்<br />வாழ்க்கை மாறும்</span></p> <p style="margin-top: 0pt; margin-bottom: 0pt;"> </p> <span style="font-size:100%;"><b><span style="font-family:Arial;"> <span style="color: rgb(255, 0, 0);">*</span> <span style="color: rgb(0, 128, 0);">* </span><span style="color: rgb(255, 153, 0);">*</span> <span style="color: rgb(0, 128, 0);">*</span> <span style="color: rgb(255, 0, 0);">*</span></span></b></span><span style="font-size:100%;"><span style="color: rgb(255, 0, 0);font-family:aAvarangal;" > </span></span><span style=";font-family:aAvarangal;font-size:100%;" ><br /> முதலில்<br /> வாழ்க்கையிலிருந்து<br /> வார்த்தையை மீட்போம்<br /> பின்னர்<br /> அர்த்தத்திலிருந்து<br /> வார்த்தையை மீட்போம்<br /> <br /> வாழ்வின் நீள அகலம் கருதி<br /> வார்த்தைகளிலும் நாம்<br /> மழித்தல் நீட்டல் செய்வோம்<br /> <br /> மரித்தான் என்ற சொல்லை யெறிந்து<br /> வாழ்வை வென்றான் என்று புகல்வோம்<br /> <br /> தோல்வி என்னும் சொல்லைத் தொலைத்து<br /> விலகி நிற்கும் வெற்றியென்றுரைப்போம்<br /> <br /> எதிரி என்ற வார்த்தை எதற்கு?<br /> தூரத்து நண்பன் சொல்லித் திளைப்போம்<br /> <br /> சதிபதி இருவர் சண்டைகள் இட்டால்<br /> முரட்டு அன்பென்று மொழிந்து பார்ப்போம்<br /> <br /> இலைகள் கழிந்த கிளைகள் கண்டால்<br /> அடுத்த வசந்த ஆரம்பம் என்போம்<br /> <br /> நொந்த தேகம் நோயில் விழுந்தால்<br /> உடம்பே கொள்ளும் ஓய்வென்றுரைப்போம்<br /> <br /> வெள்ளைச் சட்டையில் மைத்துளிபட்டால்<br /> மையைச் சுற்றிலும் வெண்மையென்போம்<br /> <br /> நிலவைத் தொலைத்த வானம் என்பதை<br /> விண்மீன் முளைத்த விண்வெளி என்போம்<br /> <br /> எதிர்மறை வார்த்தைகள்<br /> உதிர்ந்து போகட்டும்<br /> <br /> உடன்பாட்டு மொழிகள்<br /> உயிர் கொண்டெழட்டும்<br /> <br /> பழைய வார்த்தைகள் பறித்துப் பறித்துப்<br /> புதிய நிலத்தில் பதியன்போடுவோம்<br /> <br /> புளித்த வார்த்தைகள் மாறும்போது<br /> சலித்த வாழ்க்கையும்<br /> சட்டென்று மாறும்<br /> <br /> </span> <span style="font-size:100%;"><b><span style="font-family:Arial;"> <span style="color: rgb(255, 0, 0);">*</span> <span style="color: rgb(0, 128, 0);">* </span><span style="color: rgb(255, 153, 0);">*</span> <span style="color: rgb(0, 128, 0);">*</span> <span style="color: rgb(255, 0, 0);">*</span></span></b></span>Blankhttp://www.blogger.com/profile/05932071295459267171noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5392858887796987809.post-21786784025369154392010-04-20T07:38:00.000-07:002010-04-20T07:40:10.685-07:00காலமே என்னைக் காப்பாற்று<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://dl2.glitter-graphics.net/pub/582/582582jmnfho5mjf.jpg"><img style="float: right; margin: 0pt 0pt 10px 10px; cursor: pointer; width: 300px; height: 397px;" src="http://dl2.glitter-graphics.net/pub/582/582582jmnfho5mjf.jpg" alt="" border="0" /></a><br /><span style="font-size: 9pt;font-family:aAvarangal;" >அதிகாலைக்கனவு கலைக்கும்<br /> அலாரத்திடமிருந்தும் -<br /> <br /> நித்தம் நித்தம்<br /> ரத்தத்தில் அச்சேறிவரும்<br /> பத்திரிகைச் செய்திகளின் பயங்கரத்திலிருந்தும் -<br /> <br /> தென்னைமரத்தில்<br /> அணில்வேடிக்கைபார்க்கும்<br /> குழந்தை நிமிஷத்தில்<br /> அலறும் தொலைபேசியின் அபாயத்திலிருந்தும் -<br /> <br /> ஒளிமயமான கற்பனை உதிக்கும் வேளை<br /> தலைமறைவாகித் தொலைக்கும் பேனாவிலிருந்தும் -<br /> <br /> விஞ்ஞானிபோல் புத்திசெதுக்கி<br /> முனிவன்போல் புலனடக்கித்<br /> தும்பிபிடிக்குமொரு பொற்பொழுதில்<br /> தொழிலைக் கெடுக்கும் தும்மலிலிருந்தும் -<br /> <br /> காலமே<br /> என்னைக்<br /> காப்பாற்று<br /> <br /> </span> <b><span style="font-family:Arial;"> <span style="color:#ff0000;">*</span> <span style="color:#008000;">* </span><span style="color:#ff9900;">*</span> <span style="color:#008000;">*</span> <span style="color:#ff0000;">*</span></span></b><span style="font-size:9pt;"><span style="font-family:aAvarangal;color:#ff0000;"> </span></span><span style="font-size: 9pt;font-family:aAvarangal;" ><br /> ஒரே ஒரு புத்தகம்படித்த<br /> 'அறிவாளி'யிடமிருந்தும் -<br /> <br /> சிநேகிக்கும் பெரியவர்களின்<br /> சிகரெட் புகையிலிருந்தும் -<br /> <br /> எல்லாரும் கதறியழ<br /> எனக்குமட்டும் கண்ணீர்வராத<br /> இழவு வீட்டிலிருந்தும் -<br /> <br /> காலமே<br /> என்னைக்<br /> காப்பாற்று<br /> <br /> </span> <b><span style="font-family:Arial;"> <span style="color:#ff0000;">*</span> <span style="color:#008000;">* </span><span style="color:#ff9900;">*</span> <span style="color:#008000;">*</span> <span style="color:#ff0000;">*</span></span></b><span style="font-size:9pt;"><span style="font-family:aAvarangal;color:#ff0000;"> </span></span> <p style="margin-top: 0pt; margin-bottom: 0pt;"> <span style="font-size: 9pt;font-family:aAvarangal;" >பயணியர்விடுதிக்<br /> கொசுவிடமிருந்தும் -<br /> <br /> முத்திரைவிழாத அஞ்சல்தலைகளை<br /> உற்றுக்கிழித்துப் பயன்படுத்தும்<br /> உலோபியிடமிருந்தும் -<br /> <br /> கை கழுவ அமர்ந்த<br /> சாப்பாட்டு மேஜையில்<br /> கைகுலுங்க வரும்<br /> கைகளிலிருந்தும்...</span></p><p style="margin-top: 0pt; margin-bottom: 0pt;"><br /></p><p style="margin-top: 0pt; margin-bottom: 0pt;" align="justify"> <span style="font-size: 9pt;font-family:aAvarangal;" >நோயுற்ற காலை<br />தனிமையிலிருந்தும்-<br /><br />நோய்கள் வந்தபின்<br />மருந்திடமிருந்தும் -<br /><br />மருந்து தீர்ந்தபின்<br />நோயிடமிருந்தும் -<br /><br />காலமே<br />என்னைக்<br />காப்பாற்று<br /><br /></span> <b><span style="font-family:Arial;"> <span style="color:#ff0000;">*</span> <span style="color:#008000;">* </span><span style="color:#ff9900;">*</span> <span style="color:#008000;">*</span> <span style="color:#ff0000;">*</span></span></b></p><p style="margin-top: 0pt; margin-bottom: 0pt;" align="justify"> <span style="font-size: 9pt;font-family:aAvarangal;" >எனதுபக்கம் நியாயமிருந்தும்<br />சாட்சிகள் இல்லாச் சந்தர்ப்பத்திலிருந்தும் -<br /><br />வருமானம் எல்லாம் தீரும் வயதில்<br />வரிபாக்கி கேட்கும் ஆணையிலிருந்தும் -<br /><br />என்னைப் பகையாய் எண்ணும் வாசலில்<br />பரிந்துரைகோரும் பாவத்திலிருந்தும் -<br /><br />இல்லையென்றொருவன்<br />தவிக்கும்பொழுதில்<br />இல்லையென்று நான்<br />தவிர்ப்பதிலிருந்தும்<br /><br />காலமே<br />என்னைக்<br />காப்பாற்று<br /><br /></span> <b><span style="font-family:Arial;"> <span style="color:#ff0000;">*</span> <span style="color:#008000;">* </span><span style="color:#ff9900;">*</span> <span style="color:#008000;">*</span> <span style="color:#ff0000;">*</span></span></b><span style="font-size: 9pt;"><span style="font-family:aAvarangal;color:#ff0000;"> </span></span><span style="font-size: 9pt;font-family:aAvarangal;" ><br />சக ரயில் பயணியின்<br />அரட்டையிலிருந்தும்<br />அரட்டை முடிந்ததும்<br />குறட்டையிலிருந்தும்<br /><br />காலமே<br />என்னைக்<br />காப்பாற்று<br /><br /></span> <b><span style="font-family:Arial;"> <span style="color:#ff0000;">*</span> <span style="color:#008000;">* </span><span style="color:#ff9900;">*</span> <span style="color:#008000;">*</span> <span style="color:#ff0000;">*</span></span></b><span style="font-size: 9pt;"><span style="font-family:aAvarangal;color:#ff0000;"> </span></span><span style="font-size: 9pt;font-family:aAvarangal;" ><br />தீதும் நன்றும் பிறர்தர வாரா<br />என்பது எனக்கு ஏற்புடைத்தென்பதால்<br /><br />என்னிடமிருந்தே<br />என்னிடமிருந்தே<br /><br />காலமே<br />என்னைக்<br />காப்பாற்று<br /><br /></span> <b><span style="font-family:Arial;"> <span style="color:#ff0000;">*</span> <span style="color:#008000;">* </span><span style="color:#ff9900;">*</span> <span style="color:#008000;">*</span> <span style="color:#ff0000;">*</span></span></b><span style="font-size: 9pt;"><span style="font-family:aAvarangal;color:#ff0000;"> </span></span></p> <p style="margin-top: 0pt; margin-bottom: 0pt;" align="justify"><b> <span style="font-family:Arial;"><br /></span></b></p><p style="margin-top: 0pt; margin-bottom: 0pt;"><span style="font-size: 9pt;font-family:aAvarangal;" ><br /></span></p>Blankhttp://www.blogger.com/profile/05932071295459267171noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5392858887796987809.post-7764207074827284252010-04-20T01:46:00.001-07:002010-04-20T01:49:02.289-07:00ஊழி.<div style="text-align: justify;"><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://members.optushome.com.au/mayuranet/poems/vairamuthu/images/oozhi.jpg"><img style="float: left; margin: 0pt 10px 10px 0pt; cursor: pointer; width: 73px; height: 103px;" src="http://members.optushome.com.au/mayuranet/poems/vairamuthu/images/oozhi.jpg" alt="" border="0" /></a><span style="color: rgb(255, 204, 0);font-family:aAvarangal;font-size:9pt;" >நிலையாமை ஒன்றே நிலையானது என்பது நிலைத்த உண்மை. ஆனால், இந்தக் கவிதையில் நான் நிலையாமை பேசியிருப்பது மானுடத்தை மாயாவாதத்தில் தள்ள அல்ல. இருக்கும் பூமிக்கு இன்னொரு சிறகு கட்ட; அழிவை உழுது அன்பு விதைக்க.</span><br /><span style="color: rgb(255, 204, 0);"> </span><br /></div><br /><br /><span style=";font-family:aAvarangal;font-size:9pt;" ><br />கடைசியாய் ஒருமுறை<br /> கூவிக்கொள்க குயில்களே!<br /><br /> கடைசியாய் ஒருமுறை<br /> வான்பாருங்கள் மலர்களே!<br /><br /> இப்போது வழங்கும் முத்தத்திலிருந்து<br /> இதழ்பிரிக்காதீர் காதலரே!<br /><br /> மார்புகுடிக்கும் மழலைகளைத்<br /> தள்ளிவிடாதீர் தாயர்களே!<br /><br /> எது நேரக்கூடாதோ<br /> அது நேரப்போகிறது<br /><br /> சிறிது நேரம்தான்...<br /> பூமி சிதறப்போகிறது<br /><br /> நாலரைக்கோடி ஆண்டுகளின்<br /> அடையாளச் சின்னம்<br /> அழியப் போகிறது<br /><br /> சூரியக்குயவன் செய்த<br /> பெரிய மண்பானை<br /> உடையப் போகிறது<br /><br /> </span> <b><span style="font-family:Arial;"> <span style="color: rgb(255, 0, 0);">*</span> <span style="color: rgb(0, 128, 0);">* </span><span style="color: rgb(255, 153, 0);">*</span> <span style="color: rgb(0, 128, 0);">*</span> <span style="color: rgb(255, 0, 0);">*</span></span></b><span style="font-size:9pt;"><span style="color: rgb(255, 0, 0);font-family:aAvarangal;" > </span></span><span style=";font-family:aAvarangal;font-size:9pt;" ><br /> திட்டுத்திட்டாய் பூமிக்குள்ளிருக்கும்<br /> தட்டுக்கள் எழும்<br /> ஒன்றன்மீதொன்று படையெடுக்க...<br /><br /> பூமியின் வயிற்றெரிச்சலாய்க்<br /> காலங்காலமாய்க் கனன்றுகிடந்த<br /> அக்கினிக்குழம்புகள் விடுதலைகேட்க...<br /><br /> வெறிகொண்ட மேகங்கள்<br /> விரைவதைப்போலப்<br /> பாறைகள் பூமிக்குள்<br /> பயணப்பட...<br /><br /> தொடங்கிவிட்டது தொடங்கிவிட்டது<br /> பூமிக்குள் ஒரு குருட்சேத்திரம்<br /><br /> </span> <b><span style="font-family:Arial;"> <span style="color: rgb(255, 0, 0);">*</span> <span style="color: rgb(0, 128, 0);">* </span><span style="color: rgb(255, 153, 0);">*</span> <span style="color: rgb(0, 128, 0);">*</span> <span style="color: rgb(255, 0, 0);">*</span></span></b><span style="font-size:9pt;"><span style="color: rgb(255, 0, 0);font-family:aAvarangal;" > </span></span><span style=";font-family:aAvarangal;font-size:9pt;" ><br /> பறவைகளுக்கு மூக்குவேர்த்தது<br /> விலங்குகளுக்கு விளங்கிவிட்டது<br /><br /> குஞ்சுபிறக்கத் திறக்கும் முட்டைபோல்<br /> பொத்துக்கொண்டது பூமியின் ஓடு<br /><br /> ஜீசஸ்! ஈஸ்வரா! அல்லா! முருகா!<br /> காற்றில் சமாதியாயின கதறல்கள்<br /><br /> </span> <b><span style="font-family:Arial;"> <span style="color: rgb(255, 0, 0);">*</span> <span style="color: rgb(0, 128, 0);">* </span><span style="color: rgb(255, 153, 0);">*</span> <span style="color: rgb(0, 128, 0);">*</span> <span style="color: rgb(255, 0, 0);">*</span></span></b><span style="font-size:9pt;"><span style="color: rgb(255, 0, 0);font-family:aAvarangal;" > </span></span><span style=";font-family:aAvarangal;font-size:9pt;" ><br /> வான் நடுங்கியது<br /> பூமியின் இடியில்<br /><br /> மேகம் நனைந்தது<br /> கடல்களின் அலையில்<br /><br /> பூமியின் வயிற்றில்<br /> புகுந்தன தேசங்கள்<br /><br /> கடல்களை எரித்தது<br /> அக்கினிக் குழம்பு<br /><br /> குன்று பெயர்த்துக்<br /> கோலி ஆடியது காற்று<br /><br /> </span> <b><span style="font-family:Arial;"> <span style="color: rgb(255, 0, 0);">*</span> <span style="color: rgb(0, 128, 0);">* </span><span style="color: rgb(255, 153, 0);">*</span> <span style="color: rgb(0, 128, 0);">*</span> <span style="color: rgb(255, 0, 0);">*</span></span></b><span style="font-size:9pt;"><span style="color: rgb(255, 0, 0);font-family:aAvarangal;" > </span></span><span style=";font-family:aAvarangal;font-size:9pt;" ><br /> பாளம்பாளமாய்<br /> பூமி பிளக்க...<br /><br /> பூகம்ப அளவை சொல்லும்<br /> ரிக்டர் வெடிக்க...<br /><br /> ஊழித்தீயின் உச்சிப்பொறிகள்<br /> கண்டம் விட்டுக் கண்டம் குதிக்க...<br /><br /> அவரவர் வீடு அவரவர் கல்லறை<br /><br /> </span> <b><span style="font-family:Arial;"> <span style="color: rgb(255, 0, 0);">*</span> <span style="color: rgb(0, 128, 0);">* </span><span style="color: rgb(255, 153, 0);">*</span> <span style="color: rgb(0, 128, 0);">*</span> <span style="color: rgb(255, 0, 0);">*</span></span></b><span style="font-size:9pt;"><span style="color: rgb(255, 0, 0);font-family:aAvarangal;" > </span></span> <p style="margin-top: 0pt; margin-bottom: 0pt;"><span style=";font-family:aAvarangal;font-size:9pt;" > மலையைப் பறித்துக் கடலில் எறிந்தது<br /> மலை பறித்த பள்ளத்தில்<br /> கடல் அள்ளி ஊற்றியது<br /> பூகோளம் தெரியாத பூகம்பம்!<br /><br /> தன் சுற்று வட்டம்<br /> இடவலமா வல இடமா<br /> முதன்முதலில் பூமிக்குச் சந்தேகம் வந்தது</span></p><p style="margin-top: 0pt; margin-bottom: 0pt;"><br /></p><p style="margin-top: 0pt; margin-bottom: 0pt;" align="justify"> <span style=";font-family:aAvarangal;font-size:9pt;" >பட்டாசு கொளுத்திய புட்டியாய்<br />பூமிப்பந்து பொடியாதல் கண்டு<br />விசும்பியது விசும்பு<br /><br />எல்லா மேகங்களையும் இழுத்துத்<br />தன் ஒற்றைக்கண்ணை மூடிக்கொண்டது<br /><br /></span> <b><span style="font-family:Arial;"> <span style="color: rgb(255, 0, 0);">*</span> <span style="color: rgb(0, 128, 0);">* </span><span style="color: rgb(255, 153, 0);">*</span> <span style="color: rgb(0, 128, 0);">*</span> <span style="color: rgb(255, 0, 0);">*</span></span></b><span style="font-size:9pt;"><span style="color: rgb(255, 0, 0);font-family:aAvarangal;" > </span></span></p> <span style=";font-family:aAvarangal;font-size:9pt;" >பூகோளம் அறியா பூகம்பத்திற்குச்<br />சரித்திரம் எங்கேதெரியப்போகிறது<br /><br />பிரமிடுகளைப் பிய்த்துப்பிடுங்கி<br />மம்மிகளை எல்லாம் வெளியேற்றியது<br /><br />உள்ளே<br />புதிய பிணங்களைப் போட்டுப்போனது<br /><br />பசிபிக்கின் கன்னத்தில்<br />மச்சங்களாயிருந்த ஹவாய்த் தீவுகள்<br />பருக்காய் உதிர்ந்தனவே!<br /><br />மூவாயிரம் ஆண்டு மூத்தமரங்கள்<br />வேரில்லாத பென்சில்களாய்<br />வீழ்ந்து கழிந்தனவே!<br /><br />நிமிர்ந்ததெல்லாம்<br />சாய்ந்து போனதில்<br />சாய்ந்த ஒன்று நிமிர்ந்துகொண்டது<br />பைசா கோபுரம்!<br /><br /></span> <b><span style="font-family:Arial;"> <span style="color: rgb(255, 0, 0);">*</span> <span style="color: rgb(0, 128, 0);">* </span><span style="color: rgb(255, 153, 0);">*</span> <span style="color: rgb(0, 128, 0);">*</span> <span style="color: rgb(255, 0, 0);">*</span></span></b><span style="font-size:9pt;"><span style="color: rgb(255, 0, 0);font-family:aAvarangal;" > </span></span><span style=";font-family:aAvarangal;font-size:9pt;" ><br />அட்லாண்டிக் தூக்கியெறிந்த<br />அலையன்று விழுந்ததில்<br />சகாப்த உறக்கம் கலைந்தது - சகாரா<br /><br />விழுந்த அலை எழுவதற்குள்<br />சகாரா பாவம் சமுத்திரமானது<br /><br />சீனப் பெருஞ்சுவர் எடுத்துப்<br />பாக்குப் போட்டுக்கொண்ட பூகம்பம்<br />தாஜ்மகாலைச் சுண்ணாம்பாய்த்<br />தகர்த்துக்கொண்டு<br />வெற்றிலைபோட ஓடியது<br />ஆப்பிரிக்கக் காட்டுக்கு.<br /><br />இன்னொரு கிரகம் ஏகக் கருதி<br />ஆக்சிஜன் தாண்டிய உயரம் பறந்து<br />இறந்து விழுந்தன இந்தியப் புறாக்கள்<br /><br />உறுப்புகள் இடம்மாறிப்போன பூமி கேட்டது :<br />இது இறப்பா?<br />இன்னொரு பிறப்பா?<br /><br /></span> <b><span style="font-family:Arial;"> <span style="color: rgb(255, 0, 0);">*</span> <span style="color: rgb(0, 128, 0);">* </span><span style="color: rgb(255, 153, 0);">*</span> <span style="color: rgb(0, 128, 0);">*</span> <span style="color: rgb(255, 0, 0);">*</span></span></b><span style="font-size:9pt;"><span style="color: rgb(255, 0, 0);font-family:aAvarangal;" > </span></span><span style=";font-family:aAvarangal;font-size:9pt;" ><br />எது நைல்? எது தேம்ஸ்?<br />எது கங்கை? எது அமேசான்?<br />எது காவிரி? எது வால்கா?<br />பிரித்துச் சொல்ல நதிகள் இல்லை<br />பெயர்கள் வைத்தவன் எவனுமில்லை<br /><br />எது சீனா? எது ரஷ்யா?<br />எது இந்தியா? எது அமெரிக்கா?<br />எது ஈரான்? எது லெபனான்?<br />பிரித்துச் சொல்ல தேசம் இல்லை<br />பிரஜை என்று யாருமில்லை<br /><br />சுவாசிக்க ஆள்தேடி<br />அலைந்தது காற்று<br /><br />துள்ள ஒரு மீனில்லை<br />துடித்தது அலை<br /><br /></span> <b><span style="font-family:Arial;"> <span style="color: rgb(255, 0, 0);">*</span> <span style="color: rgb(0, 128, 0);">* </span><span style="color: rgb(255, 153, 0);">*</span> <span style="color: rgb(0, 128, 0);">*</span> <span style="color: rgb(255, 0, 0);">*</span></span></b><span style="font-size:9pt;"><span style="color: rgb(255, 0, 0);font-family:aAvarangal;" > </span></span><span style=";font-family:aAvarangal;font-size:9pt;" ><br />வெறுமை...வெறுமை...<br />தோன்றியபோது<br />தோன்றிய வெறுமை<br />மீண்டும் அமீபா...<br />மீண்டும் பாரமேசியம்...<br /><br />மனிதா!<br />வருகின்ற பூகம்பம்<br />வரட்டும் என்றாவது<br /><br />போர்களை நிறுத்து<br />புன்னகை உடுத்து<br /><br />பூமியை நேசி<br />பூக்களை ரசி<br /><br />மனிதரை மதி<br />மண்ணைத் துதி<br />இன்றாவது.<br /><br /></span><b><span style="font-family:Arial;"> <span style="color: rgb(255, 0, 0);">*</span> <span style="color: rgb(0, 128, 0);">* </span><span style="color: rgb(255, 153, 0);">*</span> <span style="color: rgb(0, 128, 0);">*</span> <span style="color: rgb(255, 0, 0);">*</span></span></b>Blankhttp://www.blogger.com/profile/05932071295459267171noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5392858887796987809.post-43446524983191315272010-04-20T01:43:00.000-07:002010-04-21T03:39:13.732-07:00முரண்பாடுகள்.<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj9Md7KISP7QNxnhMf6YjHcBti6TDZG2HwlL0arq0hydEZI52fbvi1UuWvZyiMqGu2flXEPM5vBgganMe5B71J6NyBuABeMX5xf3gTKHeWj7Pp04scDl6J5iVjypOUjN2xRWksDBJPTf04/"><img style="float: right; margin: 0pt 0pt 10px 10px; cursor: pointer; width: 229px; height: 152px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj9Md7KISP7QNxnhMf6YjHcBti6TDZG2HwlL0arq0hydEZI52fbvi1UuWvZyiMqGu2flXEPM5vBgganMe5B71J6NyBuABeMX5xf3gTKHeWj7Pp04scDl6J5iVjypOUjN2xRWksDBJPTf04/" alt="" border="0" /></a><span style=";font-family:aAvarangal;font-size:9pt;" >போதிமரம் போதும்<br /> புத்தனைப் புதைத்துவிடு<br /> <br /> கொடிகள் காப்பாற்று<br /> தேசத்துக்குத் தீயிடு<br /> <br /> சின்னங்கள் முக்கியம்<br /> சித்தாந்தம் எரித்துவிடு<br /> <br /> கவிஞனுக்குச் சிலை<br /> கவிதைக்குக் கல்லறை<br /> <br /> உரைபோதும் பிழைப்புக்கு<br /> மூலம் கொளுத்திவிடு<br /> <br /> மன்னனுக்கு மகுடமிடு<br /> மக்களுக்கு லாடமடி<br /> <br /> நீதிமன்றம் சுத்தம்செய்<br /> நீதிக்குக் குப்பைக்கூடை<br /> <br /> கற்றது மற<br /> பட்டத்துக்குச் சட்டமிடு<br /> <br /> பெட்டி தொலைத்துவிடு<br /> சாவிபத்திரம்<br /> <br /> தலைவனைப் பலியிடு<br /> பாதுகை வழிபடு<br /><br /></span><span style=";font-family:aAvarangal;font-size:9pt;" >அகிம்சை காக்க<br />ஆயுதம் தீட்டு<br /><br />பத்தினிக்கு உதை<br />படத்துக்குப் பூ<br /><br />காதல் கவியெழுத<br />காமம் நாமெழுத<br /><br />கற்பு முக்கியம்<br />கருவைக் கலை<br /><br />பசியை விடு<br />கடிகாரம் பார்த்துண்<br /><br />ஜனநாயகம் காப்பாற்று<br />ஜனங்களைக் கொன்றுவிடு<br /><br />முரண்பாடே நடைமுறையாய்<br />நடைமுறையே முரண்பாடாய்ச்<br />சென்றுதேய்ந்திறுகின்ற சிறுவாழ்வில்<br />முரண்பாடெனக்குள் யாதென்று<br />மூளைபுரட்டி யோசித்தேன்<br /><br />மிருகத்தைக் கொல்லாமல்<br />தேவநிலை தேடுகிறேன்<br /><br /></span> <b><span style="font-family:Arial;"> <span style="color: rgb(255, 0, 0);">*</span> <span style="color: rgb(0, 128, 0);">* </span><span style="color: rgb(255, 153, 0);">*</span> <span style="color: rgb(0, 128, 0);">*</span> <span style="color: rgb(255, 0, 0);">*</span></span></b>Blankhttp://www.blogger.com/profile/05932071295459267171noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5392858887796987809.post-10166564228467290422010-04-20T01:40:00.000-07:002010-04-20T01:42:23.335-07:00சிரிப்பு.<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://t3.gstatic.com/images?q=tbn:KU__VK678EiJ6M:http://thisfragiletent.files.wordpress.com/2009/02/israel-125year-old-man-laughing.jpg"><img style="float: right; margin: 0pt 0pt 10px 10px; cursor: pointer; width: 231px; height: 227px;" src="http://t3.gstatic.com/images?q=tbn:KU__VK678EiJ6M:http://thisfragiletent.files.wordpress.com/2009/02/israel-125year-old-man-laughing.jpg" alt="" border="0" /></a><span style="font-size: 9pt;font-family:aAvarangal;" >வாழ்க்கை பூட்டியே கிடக்கிறது<br /> சிரிப்புச் சத்தம் கேட்கும்போதெல்லாம்<br /> அது திறந்து கொள்கிறது<br /> <br /> வாழ்வின்மீது இயற்கை தெளித்த<br /> வாசனைத் தைலம் சிரிப்பு<br /> <br /> எந்த உதடும் பேசத் தெரிந்த<br /> சர்வதேச மொழி சிரிப்பு<br /> <br /> உதடுகளின் தொழில்கள் ஆறு<br /> சிரித்தல் முத்தமிடல்<br /> உண்ணால் உறிஞ்சல்<br /> உச்சரித்தல் இசைத்தல்<br /> <br /> சிரிக்காத உதட்டுக்குப்<br /> பிற்சொன்ன ஐந்தும்<br /> இருந்தென்ன? தொலைந்தென்ன?<br /> தருவோன் பெறுவோன்<br /> இருவர்க்கும் இழப்பில்லாத<br /> அதிசய தானம்தானே சிரிப்பு<br /> <br /> சிரிக்கத் திறக்கும் உதடுகள் வழியே<br /> துன்பம் வெளியேறிவிடுகிறது<br /> <br /> ஒவ்வொருமுறை சிரிக்கும்போதும்<br /> இருதயம்<br /> ஒட்டடையடிக்கப்படுகிறது<br /> <br /> சிரித்துச் சிந்தும் கண்ணீரில்<br /> உப்புச் சுவை தெரிவதில்லை<br /> <br /> </span> <b><span style="font-family:Arial;"> <span style="color:#ff0000;">*</span> <span style="color:#008000;">* </span><span style="color:#ff9900;">*</span> <span style="color:#008000;">*</span> <span style="color:#ff0000;">*</span></span></b><span style="font-size: 9pt;"><span style="font-family:aAvarangal;color:#ff0000;"> </span></span><span style="font-size: 9pt;font-family:aAvarangal;" ><br /> முள்ளும் இதுவே<br /> ரோஜாவும் இதுவே<br /> <br /> சிரிப்பு<br /> இடம்மாறிய முரண்பாடுகளே<br /> இதிகாசங்கள்<br /> <br /> ஒருத்தி<br /> சிரிக்கக்கூடாத இடத்தில்<br /> சிரித்துத் தொலைத்தாள்<br /> அதுதான் பாரதம்<br /> <br /> ஒருத்தி<br /> சிரிக்க வேண்டிய இடத்தில்<br /> சிரிப்பைத் தொலைத்தாள்<br /> அதுதான் ராமாயணம்<br /> <br /> எந்தச் சிரிப்பும்<br /> மோசமாதில்லை<br /> <br /> பாம்பின் படம்கூட<br /> அழகுதானே?<br /> <br /> சிரிப்பொலிக்கும் வீட்டுத்திண்ணையில்<br /> மரணம் உட்கார்வதேயில்லை<br /> <br /> பகலில் சிரிக்காதவர்க்கெல்லாம்<br /> மரணம்<br /> ஒவ்வொரு சாயங்காலமும்<br /> படுக்கைதட்டிப் போடுகிறது<br /> <br /> ஒரு<br /> பள்ளத்தாக்கு முழுக்கப்<br /> பூப் பூக்கட்டுமே<br /> ஒரு<br /> குழந்தையின் சிரிப்புக்கு ஈடாகுமா?<br /> <br /> </span> <b><span style="font-family:Arial;"> <span style="color:#ff0000;">*</span> <span style="color:#008000;">* </span><span style="color:#ff9900;">*</span> <span style="color:#008000;">*</span> <span style="color:#ff0000;">*<br /><br /></span></span></b><span style="font-size: 9pt;font-family:aAvarangal;" >காதலின் முன்னுரை<br />கடனுக்கு மூலதனம்<br />உதடுகளின் சந்திரோதயம்<br />விலங்கைக் கழித்த மனிதமிச்சம்<br />சிரிப்பை இவ்வாறெல்லாம்<br />சிலாகித்தாலும்<br />மரிக்கும்வரை சிரிக்காத மனிதர்கள்<br />உண்டா இல்லையா?<br /><br />சிரியுங்கள் மனிதர்களே!<br /><br />பூக்களால் சிரிக்கத் தெரியாத<br />செடிகொடிகளுக்கு<br />வண்டுகளின் வாடிக்கை இல்லை<br /><br />சிரிக்கத் தெரியாதோர் கண்டு<br />சிரிக்கத் தோன்றுமெனக்கு<br /><br />இவர்கள் பிறக்க<br />இந்திரியம் விழவேண்டியவிடத்தில்<br />கண்ணீர் விழுந்துற்றதோவென்று<br />கவலையேறுவேன்<br /><br />சற்றே உற்றுக் கவனியுங்கள்<br />சிரிப்பில் எத்தனை ஐ�தி?<br /><br />கீறல்விழுந்த இசைத்தட்டாய்<br />ஒரே இடத்தில் சுற்றும்<br />உற்சாகக் சிரிப்பு<br /><br />தண்ணீரில் எறிந்த தவளைக்கல்லாய்<br />விட்டுவிட்டுச் சிரிக்கும் வினோதச் சிரிப்பு<br /><br />தலையில் விழுந்த தாமிரச் சொம்பாய்ச்<br />சென்��றடித் தேய்ந்தழியும் சிரிப்பு<br /><br />கண்ணுக்குத் தெரியாத<br />சுவர்க்கோழி போல<br />உதடு பிரியாமல்<br />ஓசையிடும் சிரிப்பு<br /><br />சிரிப்பை இப்படி<br />சப்த அடிப்படையில்<br />ஐ�தி பிரிக்கலாம்<br /><br />சில<br />உயர்ந்த பெண்களின் சிரிப்பில்<br />ஓசையே எழுவதில்லை<br /><br />நிலவின் கிரணம்<br />நிலத்தில் விழுந்தால்<br />சத்தமேது சத்தம்?<br /><br />சிறுசிறு சொர்க்கம் சிரிப்பு<br />ஜீவ அடையாளம் சிரிப்பு<br /><br />ஒவ்வொரு சிரிப்பிலும்<br />ஒருசில மில்லிமீட்டர்<br />உயிர்நீளக் கூடும்<br /><br />மரணத்தைத் தள்ளிப்போடும்<br />மார்க்கம்தான் சிரிப்பு<br /><br />எங்கே!<br />இரண்டுபேர் சந்தித்தால்<br />தயவுசெய்து மரணத்தைத்<br />தள்ளிப் போடுங்களேன்!<br /><br /></span> <b><span style="font-family:Arial;"> <span style="color:#ff0000;">*</span> <span style="color:#008000;">* </span><span style="color:#ff9900;">*</span> <span style="color:#008000;">*</span> <span style="color:#ff0000;">*</span></span></b>Blankhttp://www.blogger.com/profile/05932071295459267171noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-5392858887796987809.post-34608290053413538632010-04-20T01:37:00.000-07:002010-04-20T01:39:45.340-07:00மெளனத்தில் புதைந்த கவிதைகள்.<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://t0.gstatic.com/images?q=tbn:ekmQU4JKKw9CXM:http://www.leetsoftware.com/screenshots/sunset.jpg"><img style="float: right; margin: 0pt 0pt 10px 10px; cursor: pointer; width: 284px; height: 213px;" src="http://t0.gstatic.com/images?q=tbn:ekmQU4JKKw9CXM:http://www.leetsoftware.com/screenshots/sunset.jpg" alt="" border="0" /></a><span style="font-size: 9pt;font-family:aAvarangal;" >கம்மாக் கரையோரம்<br /> களையெடுக்கும் வேளையில<br /> கறுப்புக் கொடபுடிச்சுக்<br /> கரைவழியே போனீரு<br /> <br /> அப்ப நிமிந்தவதான்<br /> அப்புறமாக் குனியலையே<br /> கொடக்கம்பி போலமனம்<br /> குத்திட்டு நிக்கிறதே<br /> <br /> நீர்போனபின்னும் ஒம்ம<br /> நெழல்மட்டும் போகலையே<br /> நெஞ்சுக்குழியில் ஒம்ம<br /> நெழல்வந்து விழுந்திருச்சே<br /> <br /> வண்ண மணியாரம்<br /> வலதுகையிக் கெடியாரம்<br /> ஆனை புலியெல்லாம்<br /> அடக்கிவைக்கும் அதிகாரம்<br /> <br /> போறபோக்கில் ஒரு<br /> புஞ்சிரிப்பால் உசுர்கசக்கி<br /> வேரோட பிடுங்கிஎன்ன<br /> வெயில்தரையில் போட்டீரே<br /> <br /> வெல்லப் பார்வைஒண்ணு<br /> வீசிவிட்டீர் முன்னாடி<br /> தாங்காத மனசுஇப்பத்<br /> தண்ணிபட்ட கண்ணாடி<br /> <br /> </span> <b><span style="font-family:Arial;"> <span style="color:#ff0000;">*</span> <span style="color:#008000;">* </span><span style="color:#ff9900;">*</span> <span style="color:#008000;">*</span> <span style="color:#ff0000;">*</span></span></b><span style="font-size: 9pt;"><span style="font-family:aAvarangal;color:#ff0000;"> </span></span><span style="font-size: 9pt;font-family:aAvarangal;" ><br /> பச்சி ஒறங்கிருச்சு<br /> பால், தயிராத் தூங்கிருச்சு<br /> இச்சி மரத்து<br /> எலகூடத் தூங்கிருச்சு<br /> <br /> காசநோய்க்காரிகளும்<br /> கண்ணுறங்கும் வேளையில<br /> ஆசநோய் வந்தமக<br /> அரநிமிசம் தூங்கலையே<br /> <br /> ஒறங்காத கண்ணுறங்க<br /> உபாயம் ஒண்ணு உள்ளதய்யா<br /> அழகா! நான் ஒறங்கஒம்ம<br /> அழுக்குவேட்டி தாருமய்யா<br /> <br /> </span> <b><span style="font-family:Arial;"> <span style="color:#ff0000;">*</span> <span style="color:#008000;">* </span><span style="color:#ff9900;">*</span> <span style="color:#008000;">*</span> <span style="color:#ff0000;">*</span></span></b><span style="font-size: 9pt;"><span style="font-family:aAvarangal;color:#ff0000;"> </span></span><span style="font-size: 9pt;font-family:aAvarangal;" ><br /></span><p style="margin-top: 0pt; margin-bottom: 0pt;"> <span style="font-size: 9pt;font-family:aAvarangal;" >குத்துதய்யா கொடையுதய்யா<br />குறுகுறுன்னு வருகுதய்யா<br />சூறாவளி புகுந்து<br />சுத்துதய்யா தலக்குள்ள<br /><br />தைலந்தான் தேச்சேன்<br />தலவலியோ தீரலையே<br />நொச்சிஎல வச்சேன்<br />நோய்விட்டுப் போகலையே<br /><br />தீராத தலவலியும்<br />தீரவழி உள்ளதய்யா<br />நீவச்ச தலையணைய<br />நான்வச்சாத் தீருமய்யா<br /><br /></span> <b><span style="font-family:Arial;"> <span style="color:#ff0000;">*</span> <span style="color:#008000;">* </span><span style="color:#ff9900;">*</span> <span style="color:#008000;">*</span> <span style="color:#ff0000;">*</span></span></b><span style="font-size: 9pt;"><span style="font-family:aAvarangal;color:#ff0000;"> </span></span><span style="font-size: 9pt;font-family:aAvarangal;" ><br />ஒருவாய் எறங்கலையே<br />உள்நாக்கு நனையலையே<br />ஏழெட்டு நாளா<br />எச்சில் எறங்கலையே<br /><br />ஆத்து மீன்கொழம்பு<br />அடுப்பில் கொதிக்கையில<br />ஏழுதெரு மணக்கும்<br />எனக்குமட்டும் மணக்கலையே<br /><br />சோறுதண்ணி கொள்ளஒரு<br />சுருக்குவழி உள்ளதய்யா<br />எங்கஞ்சி நீர்வந்து<br />எச்சில்வச்சுத் தாருமய்யா<br /><br /></span> <b><span style="font-family:Arial;"> <span style="color:#ff0000;">*</span> <span style="color:#008000;">* </span><span style="color:#ff9900;">*</span> <span style="color:#008000;">*</span> <span style="color:#ff0000;">*</span></span></b><span style="font-size: 9pt;"><span style="font-family:aAvarangal;color:#ff0000;"> </span></span><span style="font-size: 9pt;font-family:aAvarangal;" ><br />உள்நெஞ்சுக்குள்ள<br />ஒம்மநான் முடிஞ்சிருக்க<br />எங்கே எத்திசையில்<br />எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ?<br /><br />தவிப்புக்கு ஒருத்தன்<br />தாலிக்கு வேறொருத்தன்<br />எத்தனையோ பெண்தலையில்<br />இப்படித்தான் எழுதிருக்கோ?<br /><br />ஏழப் பொம்பளைக<br />எதுவும்சொல்ல முடியாது<br />ரப்பர் வளவிக்குச்<br />சத்தமிட வாயேது?</span></p> <p style="margin-top: 0pt; margin-bottom: 0pt;"> </p> <b><span style="font-family:Arial;"> <span style="color:#ff0000;">*</span> <span style="color:#008000;">* </span><span style="color:#ff9900;">*</span> <span style="color:#008000;">*</span> <span style="color:#ff0000;">*</span></span></b><span style="font-size: 9pt;font-family:aAvarangal;" > </span>Blankhttp://www.blogger.com/profile/05932071295459267171noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-5392858887796987809.post-8061066118908590922010-04-20T01:31:00.000-07:002010-04-20T01:35:25.240-07:00சிறுமியும் தேவதையும்.<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://angelsvisions.com.au/images/Protection.gif"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 389px; height: 230px;" src="http://angelsvisions.com.au/images/Protection.gif" alt="" border="0" /></a><span style="font-size: 9pt;font-family:aAvarangal;" >திடீரென்று...<br /> மேகங்கள் கூடிப்<br /> புதைத்தன வானை<br /> <br /> ஒரே திசையில் வீசலாயிற்று<br /> உலகக் காற்று<br /> <br /> பூனையுருட்டிய கண்ணாடிக்குடமாய்<br /> உருண்டது பூமி<br /> <br /> மருண்டது மானுடம்<br /> அப்போதுதான்<br /> அதுவும் நிகழ்ந்தது<br /> <br /> வான்வெளியில் ஒரு<br /> வைரக்கோடு<br /> <br /> கோடு வளர்ந்து<br /> வெளிச்சமானது<br /> <br /> வெளிச்சம் விரிந்து<br /> சிறகு முளைத்த தேவதையானது<br /> <br /> சிறகு நடுங்க<br /> தேவதை சொன்னது:<br /> <br /> ''48 மணி நேரத்தில்<br /> உலகப்பந்து கிழியப் போகிறது<br /> <br /> ஏறுவோர் ஏறுக என்சிறகில்<br /> இன்னொரு கிரகம் எடுத்தேகுவேன்<br /> <br /> இரண்டே இரண்டு<br /> நிபந்தனைகள்:<br /> எழுவர் மட்டுமே ஏறலாம்<br /> <br /> உமக்குப் பிடித்த ஒரு பொருள் மட்டும்<br /> உடன்கொண்டு வரலாம்''</span> <p style="margin-top: 0pt; margin-bottom: 0pt;"> </p> <p style="margin-top: 0pt; margin-bottom: 0pt;"> <b><span style="font-family:Arial;"> <span style="color:#ff0000;">*</span> <span style="color:#008000;">* </span><span style="color:#ff9900;">*</span> <span style="color:#008000;">*</span> <span style="color:#ff0000;">*</span></span></b><span style="font-size: 9pt;"><span style="font-family:aAvarangal;color:#ff0000;"> </span></span><span style="font-size: 9pt;font-family:aAvarangal;" ><br /> புஜவலியுள்ள இளைஞன் ஒருவன்<br /> சிறகு நொறுங்க ஏறினான்<br /> <br /> அவன் கையில்<br /> இறந்த காதலியின்<br /> உடைந்த வளையல்<br /> முதல் முத்தத்து ஞாபகத்துண்டு</span></p> <p style="margin-top: 0pt; margin-bottom: 0pt;"> </p> <p style="margin-top: 0pt; margin-bottom: 0pt;"> <b><span style="font-family:Arial;"> <span style="color:#ff0000;">*</span> <span style="color:#008000;">* </span><span style="color:#ff9900;">*</span> <span style="color:#008000;">*</span> <span style="color:#ff0000;">*</span></span></b><span style="font-size: 9pt;"><span style="font-family:aAvarangal;color:#ff0000;"> </span></span><span style="font-size: 9pt;font-family:aAvarangal;" ><br /> 'இன்னொரு கிரகம் கொண்டான்<br /> என்றென்றும் வாழ்க'<br /> கொட்டிமுழங்கும் கோஷத்தோடு<br /> சிறகேறினார் அரசியல்வாதி<br /> <br /> தங்கக் கடிகாரம் கழற்றியெறித்து<br /> களிம்பேறிய கடிகாரம் கட்டிக்கொண்டார்<br /> <br /> உள்ளே துடித்தது -<br /> சுவிஸ் வங்கியின்<br /> ரகசியக் கணக்கு.</span></p> <p style="margin-top: 0pt; margin-bottom: 0pt;"> </p> <p style="margin-top: 0pt; margin-bottom: 0pt;"> <b><span style="font-family:Arial;"> <span style="color:#ff0000;">*</span> <span style="color:#008000;">* </span><span style="color:#ff9900;">*</span> <span style="color:#008000;">*</span> <span style="color:#ff0000;">*</span></span></b><span style="font-size: 9pt;"><span style="font-family:aAvarangal;color:#ff0000;"> </span></span><span style="font-size: 9pt;font-family:aAvarangal;" ><br /> இறந்துவிடவில்லையென்ற சோகத்தை<br /> இருமி இருமியே<br /> மெய்ப்பித்துக் கொண்டிருக்கும்<br /> நோயாளி ஒருவர்<br /> ஜனத்திரள் பிதுக்கியதில்<br /> சிறகொதுங்கினார்</span></p> <p style="margin-top: 0pt; margin-bottom: 0pt;"> </p> <p style="margin-top: 0pt; margin-bottom: 0pt;" align="justify"> <span style="font-size: 9pt;font-family:aAvarangal;" >அவர் கையில் மருந்து புட்டி<br /> <br /> அதன் அடிவாரத்தில்<br /> அவரின்<br /> அரை அவுன்ஸ் ஆயுள்</span></p> <p style="margin-top: 0pt; margin-bottom: 0pt;" align="justify"> </p> <b><span style="font-family:Arial;"> <span style="color:#ff0000;">*</span> <span style="color:#008000;">* </span><span style="color:#ff9900;">*</span> <span style="color:#008000;">*</span> <span style="color:#ff0000;">*<br /><br /></span></span></b><p style="margin-top: 0pt; margin-bottom: 0pt;" align="justify"> <span style="font-size: 9pt;font-family:aAvarangal;" >அனுதாப அலையில்<br />ஒரு கவிஞனும் சிறகு தொற்றினான்</span></p> <p style="margin-top: 0pt; margin-bottom: 0pt;" align="justify"> </p> <p style="margin-top: 0pt; margin-bottom: 0pt;" align="justify"> <span style="font-size: 9pt;font-family:aAvarangal;" >ஜோல்னாப் பையில் -<br />அச்சுப் பிழையோடு வெளிவந்த<br />முதல் கவிதை</span></p> <p style="margin-top: 0pt; margin-bottom: 0pt;" align="justify"> </p> <p style="margin-top: 0pt; margin-bottom: 0pt;" align="justify"> <b><span style="font-family:Arial;"> <span style="color:#ff0000;">*</span> <span style="color:#008000;">* </span><span style="color:#ff9900;">*</span> <span style="color:#008000;">*</span> <span style="color:#ff0000;">*</span></span></b><span style="font-size: 9pt;"><span style="font-family:aAvarangal;color:#ff0000;"> </span></span><span style="font-size: 9pt;font-family:aAvarangal;" ><br />தன் மெல்லிய ஸ்பரிசங்களால்<br />கூட்டம் குழப்பி வழிசெய்து<br />குதித்தாள் ஒரு சீமாட்டி<br /><br />கலைந்த ஆடை சரிசெய்ய மறந்து<br />கலைந்த கூந்தல் சரிசெய்தாள்<br /> </span></p> <p style="margin-top: 0pt; margin-bottom: 0pt;" align="justify"> <span style="font-size: 9pt;font-family:aAvarangal;" >கைப்பையில்<br />அமெரிக்க வங்கிக் கடன் அட்டை</span></p> <p style="margin-top: 0pt; margin-bottom: 0pt;" align="justify"> </p> <p style="margin-top: 0pt; margin-bottom: 0pt;" align="justify"> <b><span style="font-family:Arial;"> <span style="color:#ff0000;">*</span> <span style="color:#008000;">* </span><span style="color:#ff9900;">*</span> <span style="color:#008000;">*</span> <span style="color:#ff0000;">*</span></span></b><span style="font-size: 9pt;"><span style="font-family:aAvarangal;color:#ff0000;"> </span></span><span style="font-size: 9pt;font-family:aAvarangal;" ><br />கசங்காத காக்கிச் சட்டையில்<br />கசங்கிப்போன ஒரு போலீஸ்காரி<br />லத்தியால் கூட்டம் கிழித்துப்<br />பொத்தென்று சிறகில் குதித்தாள்<br /><br />லத்தியை வீசியெறிந்தாள் - ஒரு<br />புல்லாங்குழல் வாங்கிக் கொண்டாள்</span></p> <p style="margin-top: 0pt; margin-bottom: 0pt;" align="justify"> </p> <p style="margin-top: 0pt; margin-bottom: 0pt;" align="justify"> <b><span style="font-family:Arial;"> <span style="color:#ff0000;">*</span> <span style="color:#008000;">* </span><span style="color:#ff9900;">*</span> <span style="color:#008000;">*</span> <span style="color:#ff0000;">*</span></span></b><span style="font-size: 9pt;"><span style="font-family:aAvarangal;color:#ff0000;"> </span></span><span style="font-size: 9pt;font-family:aAvarangal;" ><br />'ஒருவர்<br />இன்னும் ஒரே ஒருவர்'<br />என்றது தேவதை<br /><br />கூட்டத்தில்<br />சிற்றாடை சிக்கிய சிறுமியருத்தி<br /><br />பூவில் ரத்தஓட்டம்<br />புகுந்தது போன்றவள்<br /><br />செல்ல நாய்க்குட்டியோடு<br />சிறகில் விழுந்தாள்<br /><br />'நாய்க்குட்டியென்பது<br />பொருள் அல்ல - உயிர்<br />இறக்கிவிடு'<br />என்றது தேவதை<br /><br />'நாய் இருக்கட்டும்<br />நானிறங்கிக் கொள்கிறேன்'<br />என்றனள் சிறுமி<br /><br />சிறகு சிலிர்த்தது தேவதைக்கு<br /><br />சிலிர்த்த வேகத்தில் </span></p> <p style="margin-top: 0pt; margin-bottom: 0pt;" align="justify"> <span style="font-size: 9pt;font-family:aAvarangal;" >சிதறிவிழந்தனர் சிறகேறிகள்<br /><br />வான் பறந்தது தேவதை<br />சிறுமியோடும் செல்ல நாயோடும்.</span></p> <p style="margin-top: 0pt; margin-bottom: 0pt;" align="justify"> </p> <b><span style="font-family:Arial;"> <span style="color:#ff0000;">*</span> <span style="color:#008000;">* </span><span style="color:#ff9900;">*</span> <span style="color:#008000;">*</span> <span style="color:#ff0000;">*</span></span></b>Blankhttp://www.blogger.com/profile/05932071295459267171noreply@blogger.com1